Skip to main content

“எனது விளையாட்டின் நுணுக்கங்களை அவர்கள் அறிந்ததால் மகிழ்ச்சி” - தயாளன் ஹேமலதா !

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

 Dayalan Hemalatha's interview

 

ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடும் தமிழக கிரிக்கெட் வீராங்கனை தயாளன் ஹேமலதா தன்னுடைய அனுபவத்தை  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தயாளன் ஹேமலதா  பேசியதாவது “எதிரணி வீரர்கள் மற்றும் பிற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை எதிர்கொள்வது மிகவும் உற்சாகமான அனுபவமாகும். ஏனெனில் அவர்கள் அனைவருடனும் போட்டியிட்டு  விளையாடி வெற்றி பெறுவது  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் லாரா ஹரிஸ் மிகவும் அமைதியாக இருந்து விளையாட்டின் நுணுக்கங்களை தெளிவாக கணித்து ஆட்டத்தை விளையாடுவது என்னை மிகவும் ஈர்த்தது.

 

ஆஷ்லே கார்ட்னர், சோபியா டங்க்லி, மற்றும் கிம் கார்த்  மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் நான் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகுவதால் எனக்கு இவர்கள் அந்நியர்களாக  தெரியவில்லை. இது எங்கள் அணிக்கு ஒரு பெரிய பலம் மற்றும் கூட்டணி மூலம் அணியை  வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். உண்மையில் எங்களிடம் 19 வயதுக்குட்பட்ட இளம் வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவம் கொண்ட சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் என்று தெரிகிறது .

 

17 வயது முதல் 18 வயது வரை நான் சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு கிரிக்கெட் மீதான எனது ஆர்வமே எனது தொழிலாக மாறியது. கடவுளின் கிருபையால் அது நன்றாகவே நடந்தது மற்றும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

 

மகளிர் பிரிமியர் லீக் ஏலம் நடக்கும்போது நான் என் பெற்றோருடன் வீட்டில் இருந்தேன். ஏனெனில் நான் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் சேர்வேனா இல்லையா என்ற பதற்ற நிலைக்கு சென்றேன். பின் குஜராத் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த உடனே நான் மட்டுமில்லாமல் எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.  குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய விளையாட்டு வீரர்களான  நூதன் மற்றும் மிதாலி இருவரும் எனது கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களின் பணியை அறிந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.