ind vs aus

Advertisment

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 374 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தனர்.

375 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி, முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆட்டத்தின் 32-ஆவது ஓவரின் போது, 214 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததையடுத்து, தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா களத்தில் நின்றனர். அப்போது, ஹர்திக் பாண்டியா கால் ஷூ லேஸ் கழண்டு தடுமாற, அதைப் பார்த்த வார்னர், ஹர்திக் பாண்டியாவின் அருகே அமர்ந்து, ஷூ லேசைக் கட்டிவிட்டார். பொதுவாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே, களத்தில் வார்த்தை மோதல்களும், உரசல்களும் அதிகமாக இருக்கும். ஆனால், இன்றைய போட்டியின் போது வார்னர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து, பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

மொத்தத்தில் வேறு அணியாக மாறி நிற்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார் என ரசிகர்கள் செய்துவரும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.