Skip to main content

ஸ்மித்தைக் கேவலப் படுத்தாதீர்கள்! - டேரன் சமி ஆதரவுக் குரல்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

ஸ்மித் தடையில் இருக்கும்போது அவரை அவமானப் படுத்தும் விதமாக செய்தி வெளியிடுவது நியாயமாகாது என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் ஷமி தெரிவித்துள்ளார்.
 

Darren

 

 

 

தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இவர் நியூயார்க் நகரில் உள்ள மதுவிடுதியில் தனிமையில் அமர்ந்து பீர் அருந்தும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட, கேவலமான ஸ்மித் என்றும் பரப்புரை செய்தன. 
 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பேசியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் ஷமி, விளையாட்டு வீரர்களாக நாங்கள் சரியான விஷயங்களை செய்ய நினைக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இருக்க விரும்புகிறோம். ஆனாலும் சில தவறுகள் நடந்துவிடுகின்றன. அதற்கான தண்டனையில் இருக்கும்போது எங்களைக் கேவலப்படுத்துவது போல நடந்து கொள்ளாதீர்கள். அது மனிதத்தன்மைக்கு அழகல்ல. தவறுகளுக்கு தண்டனை தருவதைப் போல, மன்னிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு என ஸ்மித்துக்கு ஆதரவளித்துள்ளார். ஸ்மித் கனடாவில் நடக்கும் குளோபல் டி20 போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

இந்தியாவிற்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: ஸ்மித்தால் 300 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

smith

 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று (07/01/2021) தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி அரைசதமடித்து, 62 ரன்களில் சைனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபூஷனே, நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய லபூஷனே அரை சதமடித்தார். முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

இரண்டாம் நாளான இன்று (08/01/2021) லாபூஷனே 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபுறத்தில் சிறப்பாக ஆடிய ஸ்மித், 131  எடுத்த நிலையில் ஜடேஜாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி, 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது.

 

இந்திய அணி தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

 

Next Story

விஸ்டெனின் இந்திய - ஆஸ்திரேலிய அணி: ஸ்மித் தேர்வு.. கோலிக்கு இடமில்லை!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

kumble laxman

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' எனப் பெயர் இருப்பதைப்போல், இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு, 'பார்டர்- காவஸ்கர்' கோப்பை தொடர் என்ற பெயருள்ளது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர், இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் ஆகிய இருவரையும் கவுரவிக்கும் விதமாக, இரு அணிகளும் மோதும் தொடருக்கு, அவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

தற்போது கிரிக்கெட் உலகின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டென் புத்தகம், 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 'பார்டர்-காவஸ்கர்' தொடர் அணியை தேர்ந்தெடுத்துள்ளது. இரு அணிகளின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள அந்த அணிக்கு இந்தியாவின் அனில் கும்ப்ளே கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

 

விஸ்டெனின் 21ஆம் நூற்றாண்டு அணியில், இந்திய தரப்பில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலிக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

 

21 ஆம் நூற்றாண்டின் 'பார்டர்- காவஸ்கர்' தொடர் அணி பின்வருமாறு: ஹைடென், சேவாக், ஸ்மித், சச்சின், கிளார்க், லக்ஷ்மன், கில்கிறிஸ்ட், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜேசன் கிலெஸ்பி, மெக்ராத்.