Advertisment

கரோனா பரிசோதனைக்கு பின் சென்னை அணி வீரர்கள் இன்று பயிற்சியைத் தொடங்க வாய்ப்பு...

csk players

13-வது ஐபிஎல் தொடரானது இந்த மாதம் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் தற்போது இந்தத் தொடருக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை அணியைச் சேர்ந்த ஒரு பந்து வீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது சென்னை அணி பயிற்சி மேற்கொள்வதில் பின்னடவை ஏற்படுத்தியது. அதனையடுத்து அந்த 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisment

சென்னை அணியைச் சேர்ந்த மற்ற வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது என்றும் சென்னை அணி வெள்ளிக்கிழமை மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் என்றும் அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் முன்னர் கூறியிருந்தார். அதன் படி சென்னை அணி இன்று மீண்டும் தன்னுடைய பயிற்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe