Advertisment

மீண்டும் சென்னைக்கு திரும்பும் சி.எஸ்.கே; தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

fhgfghfgh

Advertisment

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களால் சென்னையில் நடைபெறவில்லை. கடந்த ஆடும் முதல் போட்டி சென்னையில் திட்டமிடப்பட்ட நிலையில் அப்போது நடைபெற்ற காவிரி போராட்டங்களின் காரணமாக முதல் போட்டிக்கு பிந்தைய அனைத்து போட்டிகளும் புனேக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சிஎஸ்கே ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

IPL CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe