Skip to main content

கடைசி இடத்தில் சென்னை அணி!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

ipl

 

 

தொடர்ச்சியான இரு தோல்விகளையடுத்து சென்னை அணி, 13-வது ஐபிஎல் தொடரின் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.

 

13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அப்போட்டியில் வென்று உற்சாகமாக தொடரைத் துவக்கிய சென்னை அணி அடுத்து விளையாடிய இரு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்தது. முன்னணி வீரர்களின் விலகல் மற்றும் காயம், வீரர்களின் நிலையான ஆட்டமின்மை எனப் பல்வேறு காரணங்களால் சென்னை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது.

 

அதில், சென்னை அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. அட்டவணையில் சென்னை அணிக்கு முந்தியுள்ள 7 அணிகளில் 5 அணிகள் 2 புள்ளி வகித்தாலும், மோசமான 'ரன் ரேட்' காரணமாக சென்னை அணி பின்தங்கியுள்ளது. இதனால், அடுத்து வரும் போட்டிகளில் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தாமல், 'ரன் ரேட்' விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு சென்னை அணி உள்ளாகியுள்ளது.

 

 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சி.எஸ்.கே. Vs டி.சி! - துபாயில் நடந்த சுவாரஸ்யம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Rishap Pant and MS Dhoni playing tennis

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் தனது தாயைச் சந்திக்க சென்றபோது, உத்தரகாண்ட் மாநிலத்தில் அவர் சென்ற கார் பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது மீண்டு வந்துள்ளார். 

இந்த பயங்கர விபத்தின் காரணமாக 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் ரிஷப் பண்ட் விளையாட முடியாமல் போனது. அவர் காயங்களில் இருந்து விரைவில் மீண்டு, தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 

இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல்.க்கான மினி ஏலம் நேற்று (19ம் தேதி) துபாயில் நடைபெற்றது. இதில் அணிகள் தங்களுக்கு தேவையான விளையாட்டு வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இந்த ஏலத்தின் போது, டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானதும் நிச்சயம் இந்த ஐ.பி.எல். போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடவிருக்கிறார் என அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். 

அதேபோல், சென்னை அணியின் கேப்டனான தோனியும் நேற்று துபாயில் இருந்தார். ஆனால், அவர் ஐ.பி.எல். ஏலம் நடக்கும் இடத்திற்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று மாலை ரிஷப் பண்ட்-டும், தோனியும் துபாயில் டென்னிஸ் விளையாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.