Advertisment

சி.எஸ். கே பயிற்சி முகாம் தொடங்கும் தேதி - தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு!

csk

Advertisment

கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு வழக்கம்போல இந்தியாவில் நடைபெறவுள்ளன. எல்லா ஆண்டுகளையும் போல இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் - மாதத்தில் இருந்து தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த, ஐந்து மைதானங்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில், சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, நேற்று (03.03.2021) சென்னை வந்தார். இதனையடுத்து சி.எஸ்.கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், அணியின் பயிற்சி முகாம் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில், வரும் 8 அல்லது 9 ஆம் தேதிகளில் எங்கள் பயிற்சி முகாமைத் தொடங்க காத்திருக்கிறோம். கேப்டன் தோனி இங்கு (சென்னை) இருக்கிறார். அம்பத்தி ராயுடு போன்றவர்களும், வேறு ஆட்டங்களில் பங்கேற்காத வீரர்களும் பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள். அணியில் உள்ள தமிழ்நாடு வீரர்களும் பயிற்சி முகாமில் பங்கெடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

IPL ipl 2021 CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe