Skip to main content

“கூல் கேப்டன் தோனி, இனி கூலாக இருக்க முடியாது...” - ரிஷப் பண்ட்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

இந்த நூற்றாண்டில் கிரிக்கெட்டில் ஒரு பெரிய புரட்சியை ஐ.பி.எல். ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களை சர்வதேச அளவிற்கு தயார் செய்ய தொடங்கியது ஐ.பி.எல். தொடர். இந்திய அணியின் வளர்ச்சிக்கும், சர்வதேச கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல். ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகள் வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. 

 

csk

 

தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 2018-ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் மோசமான காலகட்டம். மேலும், இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் அசத்த, விவாதம் தொடங்கியது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு தோனியா? ரிஷப் பண்ட்டா? என்ற பேச்சு ரசிகர்களிடமும், முன்னாள் வீரர்களிடமும் களைகட்டியது. ஆனால், ஆஸ்திரேலியா தொடரில் ஹாட்ரிக் ஃபிப்டி அடித்து அசத்தலான கம்பேக் கொடுத்து தோனி தன் ஸ்டைலில் விமர்சகர்களுக்கு பதிலளித்தார்.  


இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷப் பண்ட் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் மைதானத்தின் நடுவில் அமர்ந்து தோனியின் சாதனைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். பின்பு “தோனி எனக்கு குரு போன்றவர். தோனி இல்லை என்றால் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இந்த முறை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது கூல் கேப்டன் தோனி, இனி கூலாக இருக்க முடியாது. என் ஆட்டத்தை பார்க்க ரெடியா இருங்க மஹி பாய்” என ஆரோக்கியமான சவால் விடுகிறார் ரிஷப் பண்ட்.

 


 

ரிஷப் பண்ட்டின் இந்த சவாலை தோனி பார்த்துக்கொண்டிருப்பது போல இந்த வீடியோ முடிகிறது. இதற்கு ரிப்ளை செய்யும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் “அடிச்சு அண்டர்வேரோடு ஓடவிட்டிருவேன். மானம் போன திரும்ப வராது” என பேட்ட படத்தில் ரஜினியின் மாஸ் டைலாக் வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட்டின் வீடியோவும், சிஎஸ்கே-வின் ரிப்ளையும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரென்டாகி வருகிறது. 

 

csk

 

தல தோனியை சீண்டினால் இதுதான் நடக்கும் என ஒரு பார்வையை ஒருதரப்பு ரசிகர்கள் முன்வைக்கின்றனர். நாகரிகமான முறையில் ஆரோக்கியமான ரிஷப் பண்ட்டின் சவாலிற்கு, சிஎஸ்கே அநாகரிகமான முறையில் பதிவிட்டுள்ளது என சில ரசிகர்கள் சிஎஸ்கே-வின் ரிப்ளையை விமர்சிக்கவும் செய்கின்றனர். 
 

இதுவரை 11 சீசனில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி புதுபொலிவுடன் அணியின் பெயர் மற்றும் ஜெர்சி ஆகியவை மாற்றப்பட்டு இந்த ஆண்டு களமிறங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் என்ற பெயரில், புதிய ஜெர்சியில் சிவப்பு மற்றும் நீல நிறங்கள் கொண்டு இரண்டு வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன. 
 

டெல்லி அணியில் ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா போன்ற உள்நாட்டு பேட்ஸ்மேன்கள் முன்ரோ, இன்கிராம் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சில் போல்ட், ராபடா, கிரிஸ் மோரிஸ், சந்தீப் லாமிச்சனே என டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்ற ஆண்டை விட பலமாக உள்ளது. 
 

சென்னை அணி இதுவரை 150  போட்டிகளில் 91 வெற்றி, 57 தோல்வி மற்றும் இரண்டு போட்டியில் முடிவு இல்லாமல் 60.67 சதவீத வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 162 போட்டிகளில் 67 வெற்றி, 92 தோல்வி, 3 போட்டிகளில் முடிவு இல்லாமல் 42.13 சதவீத வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் பண்ட் இதுவரை 38 போட்டிகளில் 1248 ரன்கள், 35.66 சராசரி, 128 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளார். இந்திய அணியில் மூன்று பார்மெட்டுகளிலும் இடம்பெற தயாராகிவரும் ரிஷப் பண்ட்டிற்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக கருதப்படுகிறது. 

 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.