Skip to main content

2020 ஐபிஎல்... வழங்கப்பட்ட விருதுகளின் மொத்த விவரம்!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

ipl

 

மார்ச் மாதம் நடைபெற இருந்த 13-ஆவது ஐ.பி.எல் தொடரானது கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், கரோனா பாதிப்பு குறைவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு, அது குறித்தான அறிவிப்பை பி.சி.சி.ஐ வெளியிட்டது.

 

அதன்படி, செப்டம்பர் 19 -ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 56 போட்டிகள் லீக் போட்டிகள், 4 போட்டிகள் பிளேஆஃப் சுற்று போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஐ.பி.எல் தொடர் முடிவின் போதும், அதிக ரன்களுக்கான ஆரஞ்சு நிறத் தொப்பி, அதிக விக்கெட்டிற்கான ஊதா நிறத் தொப்பி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இவ்வருடம் வழங்கப்பட்ட விருதுகள் விவரம் பின்வருமாறு,

 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி, 473 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லுக்கு 'வளரும் வீரர்' விருது வழங்கப்பட்டது.

 

14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சருக்கு, 'மதிப்புமிக்க வீரர்' என்ற விருது வழங்கப்பட்டது.

 

அதிக சிக்ஸர் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருது மும்பை அணி வீரர் இஷான் கிஷானுக்கு வழங்கப்பட்டது.

 

அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் 'ஆரஞ்சு' நிறத் தொப்பியானது, 670 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகித்த பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.  

 

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் 'ஊதா' நிறத் தொப்பியானது, 30 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி அணி வீரர் ரபடாவுக்கு வழங்கப்பட்டது.

 

cnc

 

சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதானது, நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிகபட்ச ரன் சேர்ப்பு வேக விகிதமாக  191.42 கொண்டிருந்த மும்பை அணி வீரர் பொல்லார்ட்டிற்கு வழங்கப்பட்டது.

 

'கேம் சேஞ்சர்' என்ற ஒரு விருதும் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. 

 

 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

விராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Suryakumar Yadav

 

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.