Skip to main content

இந்திய அணியை ஏன் ஸ்லெட்ஜ் செய்வதில்லை..? சர்ச்சையான மைக்கல் கிளார்க்கின் கருத்து...

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதைக் கருத்தில் கொண்டே ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணி வீரர்களை ஸ்லெட்ஜ் செய்வதில்லை என மைக்கல் கிளார்க் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

clarke on ipl

 

 

ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு, எதிரணியை சீண்டுவதற்கும் பெயர்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு குறித்து மைக்கல் கிளார்க்கிடம் பேட்டி ஒன்றில் கேள்விகேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரிலும் இந்திய அணி எவ்வளவு வலுவானது என்பது நமக்குத் தெரியும். அதற்கு ஐ.பி.எல். போட்டித் தொடரே சான்று. இதற்காகவே ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் இந்திய அணிக்குப் பிடித்ததுபோல நடந்து கொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராகக் களத்தில் வாக்குவாதம் செய்வதையோ, அவர்களை சீண்டிப்பார்ப்பதையோ செய்ய பயந்தார்கள்.

இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் ஐ.பி.எல்.தான். மிகக்குறுகிய காலத்தில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க ஐ.பி.எல். தொடர் சிறந்த வழியாக, வீரர்களுக்குத் தெரிகிறது.  சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐ.பி.எல். அணிக்கு தேர்வு செய்கிறார்கள். எனவே ஆஸ்திரேலிய வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

விராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Suryakumar Yadav

 

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.