Advertisment

செஸ் ஒலிம்பியாட்... விஸ்வநாதன் ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு!

 Chess Olympiad ... The main responsibility for Viswanathan Anand!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்த நிலையில் இந்திய அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக இருப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையின் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 என்ற பெயரில்நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஜூலை மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் வரை இந்த போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்றுநோக்க வைக்கும் எனக்கருதப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் 20 பேர் கொண்ட இந்திய செஸ் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக இருப்பார் என அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நாராயணன், சசிகிரண், விதித் குஜராத்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Chennai Chess
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe