Skip to main content

ஊதியது டெல்லியை... 6வது வெற்றியை பதிவு செய்த சென்னை... மீண்டும் பட்டியலில் முதல் இடம்

Published on 01/05/2018 | Edited on 02/05/2018

கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கும் 11 வது ஐ.பி.எல் போட்டியின் 30வது ஆட்டம் நேற்று பூனேயில் நடைபெற்றது இதில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதின. டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் போட்டியில் வெற்றிபெற்ற புத்துணர்ச்சியோடு மாற்றங்கள் இல்லாத அதே அணியாக களம் இறங்கியது. சென்ற போட்டியில் மும்பை அணியுடன் பெற்ற தோல்விக்கு பிறகு அணியில் நான்கு மாற்றங்கள் செய்தது. காயம் காரணமாக தீபக் சாஹர் ஆடவில்லை. சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹீர், ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு அவரக்ளுக்கு பதிலாக பாப் டுபிலிஸிஸ், கே.எம்.ஆசிப், நிகிடி, கரண் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த டெல்லி அணி சென்னையை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், டுப்பிலிசிசும் களம் இறங்கினர்.


 

csk



ஆட்டத்தின் முதல் பந்திலேயே வாட்சன் வெளியேறிருக்க வேண்டியது. ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்து காலில் பட்டு எல்.பி.டபிள்யு ஆகியிருக்க வேண்டிய நேரத்தில் அவர் பேட்டில் பந்து உள்பக்கமாக பட்டதால் ஒரு நூல் இழையில் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வாட்சன் விஸ்வரூபம் எடுத்தார். 5வது ஓவரில் பிளன்கட் வீசிய பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தினார். டுப்பிலிசிஸ்சும் ஒரு புறம் ஈடு கொடுக்க, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கினர். பின்னர் ஆட்டத்தின் 10.5வது ஓவரில் டூ பிளசிஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா வெறும் ஒரு ரன்னில் ஏமாற்றம் அளிக்க பின்னர் ராயுடுவும், வாட்சனும் இணைந்தனர். இதை தொடர்ந்து சிறிது நேரம் அதிரடியாக விளையாடியது இந்த ஜோடி. பின் சிறிது நேரத்தில் ஷேன் வாட்சன் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். 



இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ராயுடுவுடன் இணைந்து ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டு அதிரடியாக ஆடினர். இதனால் ரன்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டிரண்ட் போல்ட் வீசிய 16 வது ஓவரை எதிர்கொண்ட கேப்டன் தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ராயுடு 41 ரன்னில் அவுட்டாக, இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் வெளுத்துவங்கிய தோனி 22 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 

csk



பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா 9 ரன்களும், காலின் முன்ரோ 26 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களும், மேக்ஸ்வெல் 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகி வெளியே செல்ல மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததோடு 79 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய விஜய் ஷங்கர் மட்டும் தனியாக போராடி பார்த்தும் டெல்லி அணிக்கு பலன் அளிக்கவில்லை. கடைசியில் அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் 54 ரன்களும், ராகுல் டிவாடியா 3 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்தது. அதிரடியாக ஆடிய வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.