Skip to main content

நெதர்லாந்து அணிக்கு பந்து வீசத் தேர்வான சென்னை டெலிவரி பாய் !

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Chennai delivery boy selected to bowl for Netherlands team

 

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் நெதர்லாந்து அணிக்காக நெட் பயிற்சியில் பந்துவீச சென்னையை சேர்ந்த உணவு டெலிவரியில் பணிபுரியும் நபர் தேர்வாகியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

 

சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் வயது (29) தனது கல்லூரி படிப்பை 2018-ல் முடித்துள்ளார். பின், கிரிக்கெட்டில் முழு ஆர்வம் காட்டத் தொடங்கிய லோகேஷ், ஒரு பக்கம் தினசரி தேவைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டிய சூழலுக்கு ஆளானார். அதனால், உணவு டெலிவரி செய்து கொண்டு வார இறுதியில் கிரிக்கெட் விளையாடும் பழக்கத்தை வைத்துள்ளார். இப்படி 2018 முதல் கிரிக்கெட் - உணவு டெலிவரி என லோகேஷின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படியாக ஒரு நாள் நெதர்லாந்து அணி விளம்பரம் ஒன்றை வெளியிட்டு. அதில், " ஸ்பின் பயிற்சி பவுலர்கள் தேவை" என்பது போன்று விளம்பரம் செய்துள்ளது. 

 

இதனை தற்செயலாக லோகேஷ் பார்த்து பின்பு அதற்கு அணுகியும் உள்ளார். தொடர்ந்து நெதர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவில் 10,000 பவுலர்களுக்கு மொபைல் வீடியோ மூலம் தகுதி தேர்வு நடத்தியுள்ளது. அதில், தேர்வான நான்கு வீரர்களில் லோகேஷும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்தும், தனது வாழ்க்கை சம்பவங்கள் குறித்தும் சமீபத்தில் லோகேஷ் பேசியிருந்தார். அவர் கூறுகையில், "இந்த நேரம் தான் என் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். ஏனென்றால், நான் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷேன் நடத்தும் மூன்றாம் டிவிஷன் ஆட்டத்தில் கூட விளையாடியது இல்லை. காந்த நான்கு வருடங்களாக ஐந்தாவது டிவிஷனில் தான் விளையாடி வருகிறேன். தற்போது நடந்து வரும் சீசனில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்காக நான்காவது டிவிஷனில் விளையாட பதிவு செய்துள்ளேன்.

 

இந்நிலையில், நெதர்லாந்து அணியின் நெட் பந்து வீச்சாளராக தேர்வானது, என் திறமை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். மேலும், என்னை நெதர்லாந்து அணி வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர். பின், வலைப்பந்து வீச்சாளர்கள் அறிமுக விழாவும் நடத்தினார்கள். அப்போது சில வீரர்கள் என்னிடம்," நீங்கள் தயங்க வேண்டாம்... இது உங்கள் அணி போல நினைத்துக்கொள்ளுங்கள்" என மகிழ்ச்சியுடன் அணுகினார்கள்" என்றார் லோகேஷ்.

 

தொடர்ந்து, லோகேஷ் பேசுகையில், "நெதர்லாந்து அணியின் விளம்பரத்தை பார்த்ததும் சரி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது. இதற்கு, காரணம் இந்தியாவில் அதிக சைனாமேன் பவுலர்கள் இல்லாததால் எனக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என நினைத்தேன். மேலும், நெதர்லாந்து அணியும் இது போன்ற ஒரு பவுலரைத் தான் தேடினர்" என்றார்.

 

லோகேஷ் தனது முந்தைய பயணம் குறித்து பேசுகையில்" நான் கல்லூரி காலத்துக்குப் பிறகு, கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த தொடங்கினேன். கடந்த நான்கு வருடங்களை கிரிக்கெட்டிற்காகவே செலவிட்டேன். இதனுடன், ஸ்விக்கி டெலிவரியில் சேர்ந்து தினசரி தேவைகளை பூர்த்தி செய்துகொண்டேன். இதனையே என் பிரதான பணம் ஈட்டும் வழியாகவும் பின் மாற்றிக்கொண்டேன். மேலும், டெலிவரி வேலை நேரமும் மிகவும் எளிதாக இருந்ததால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்து வந்தேன். வார இறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் போட்டிகளில் விளையாடி வந்தேன்" என நெகிழ்வாக தனது வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்தார் லோகேஷ். லோகேஷ் குமார் தேர்வான செய்தியை நெதர்லாந்து கிரிக்கெட் அணி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் லோகேஷின் படத்துடன் அவரின் வாழ்க்கை குறித்தும் சிறிது விவரித்திருந்தனர்.

 

 


 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.