Advertisment

சாம்பியன்ஸ் டிராபி தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Champions Trophy Series; Indian team announcement

Advertisment

2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்திருந்தது. இதனையடுத்து கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

அதே சமயம் இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளன. மேலும் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில் அந்த போட்டியும் துபாயில் நடைபெற உள்ளன. அதே சமயம் இந்த தொடரின் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெறும். ஒருவேளை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில் அந்த போட்டி துபாய்க்கு மாற்றப்படும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த (2025) பாகிஸ்தானில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்த போட்டிகள் இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

bcci cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe