Skip to main content

ஓப்போ -வுக்கு பைபை சொன்ன இந்தியா... வருகிறது புதிய ஸ்பான்ஸர்...

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ளது.

 

byju replaces oppo as official sponsor of indian cricket team

 

 

கடந்த சில ஆண்டுகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சராக இருந்து வந்த ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் இருந்து இந்திய ஜெர்சிகளில் ஓப்போ பெயர் இடம்பெறாது எனவும், அதற்கு பதிலாக 'பைஜூ' நிறுவனத்தின் பெயர் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி தொடர்பான செயலி நிறுவனமான 'பைஜூ' முறைப்படி இந்திய அணியின் ஸ்பான்சராவதற்கான அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணி ஓப்போ பெயர் பாதிக்கப்பட்ட ஜெர்சிக்கு பதிலாக 'பைஜூ' நிறுவனத்தின் பெயர் பதிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தே விளையாடும்.

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.