ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடரில்விளையாட இருக்கிறது. எனவே, டெஸ்ட் தொடருக்குதயாராகும்வகையில்பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே, ஒரு பயிற்சி ஆட்டம் முடிந்தநிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில்முதலில் பேட்டிங்இறங்கியஇந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்து, வேகமாக ரன்களைகுவித்தது. ப்ரித்விஷா40 ரன்களும், கில்43 ரன்களும்அடித்து ஆட்டமிழந்தனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள்,மைதானத்திற்கு வந்த வேகத்தில்திரும்பி சென்றதால், 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துதடுமாறியது.
இருப்பினும், ஜஸ்பிரிட் பும்ரா, அதிரடியாக ஆடி ரன்களைகுவித்தார். சேவாக்ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அரைசதத்தைகடந்த அவர், 57 பந்துகளில் 55ரன்கள்அடித்து அசத்தினார். பும்ராவின் அதிரடி ஆட்டத்தால், இந்தியஅணி 194 ரன்கள்எடுத்து, கவுரவமான நிலையை எட்டியது.