Skip to main content

“பும்ராவை அணிக்குள் கொண்டு வருவதால் மட்டும் ஒட்டு மொத்த நிலையும் மாறிவிடாது” - ஆகாஷ் சோப்ரா

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

"Bringing Bumrah into the team will not change the whole situation" - Akash Chopra

 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 30 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 71 ரன்களை குவித்தார்.

 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா நாங்கள் சரியாக பந்து வீசவில்லை என்றார். 

 

இந்நிலையில் நாளை நாக்பூரில் நடக்க இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் பும்ரா பங்கேற்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் அவதிப்பட்டு வந்த பும்ரா தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பும்ரா உமேஷ் யாதவிற்கு மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிகிறது.

 

பும்ரா தேர்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, “ஒரு பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவதால் மட்டும் ஒட்டு மொத்த நிலைமையும் மாறிவிடாது. இந்த வருடத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பைக்கு என்ன நடந்தது என பார்த்தீர்களா? எனவே ஒரு வீரர் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுக்காத வரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. சாஹல் தொடர்ந்து வேகமாக பந்து வீசுகிறார். மெதுவாக பந்து வீசாதவரை எப்படி விக்கெட்களை எடுக்க முடியும்?” என கூறியுள்ளார்.

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

மகிழ்ச்சியைப் பரப்புங்கள்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Spread the joy to Inspirational video released by Pakistan Cricket Team

 

முதல் குழந்தையை பெற்றெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா மற்றும் சஞ்சனா தம்பதியினருக்கு, பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். 

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் நேற்று (10-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் தொடரவிருக்கிறது.

 

ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று (10-09-2023) கொழும்பு, பிரேம தாசா மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 100 ரன்களை எளிதாகக் கடந்தது. பின்னர், அரை சதம் அடித்த ரோகித் 56 ரன்களில் வெளியேற இந்தியாவின் முதல் விக்கெட் 121 ரன்னில் விழுந்தது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. இன்றைக்கு (11-09-2023) இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து 50 ஓவர் வரை விளையாடும். பின்னர், பாகிஸ்தான் இலக்கைத் துரத்தும். ஆனால், இன்றும் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்றைய ஆட்டமும் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கடந்த வாரம் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். தங்கள் மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்றும் பெயர் சூட்டியுள்ளனர். பல்வேறு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி, பும்ராவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். இந்தப் பரிசை வாங்கிய பும்ரா தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த பதிவில் “மகிழ்ச்சியை பரப்புங்கள்” என்ற வாசகத்தையும் எழுதி பதிவிட்டுள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.