'Brilliant play-off'-Chennai Super Kings' stunning win

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டி இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியது.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரகாசமாகி உள்ளது. பெங்களூர், டெல்லி, லக்னோ போன்ற அணிகளின் ரன்களின் ரேட்டை விட சிஎஸ்கே வின் ரன் ரேட் பெரிய அளவில் உயரும். முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணி இதில் 141 ரன்கள் எடுத்திருந்தது, 142 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் 18.2 ஓவரில் 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.