Advertisment

தோனி மீதான விமர்சனம் சென்னை அணிக்கே நெருக்கடியாக அமைந்துள்ளது - பிரெட் லீ பேச்சு...

dhoni

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் கடந்த 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்கியது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இத்தொடரின் தொடக்கம் பெரும் சொதப்பலாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு வெற்றி, இரு தோல்விகள் கண்டுள்ளது. தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்குப் பின் நடக்கும் முதல் தொடர் என்பதால் தோனி மீதும், அவர் வழிநடத்தும் சென்னை அணி மீதும் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் தொடர் தோல்விகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரான பிரெட் லீ கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "சென்னை அணி வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டும். அவர்களுக்கு சரியான அணி அமைந்துள்ளது. ஆனால் வீரர்கள் களமிறங்குவதற்கான சரியான இடம் அமையவில்லை. தோனி களமிறங்கும் இடம் குறித்து வரும் தொடர் விமர்சனம் சென்னை அணிக்கே நெருக்கடியாக அமைந்துள்ளது. இது குறித்து தோனி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

Advertisment

Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe