Advertisment

காயம் காரணமாக முன்னணி பந்துவீச்சாளர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகல்?

ipl

Advertisment

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இதுவரை 18 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்து பாதியில் வெளியேறினார். பின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியின் டாஸ் நேரத்தின் போது பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், "காயத்தின் தன்மை சற்று தீவிரமாக இருப்பதால், அடுத்த சில போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என நினைக்கிறேன்" என்றார். இந்நிலையில், புவனேஷ்வர் குமார் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் அணி நிர்வாகம் இது குறித்தான எந்த அதிகாரப்பூர்வதகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SRH IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe