Advertisment

மீண்டும் வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்?

ipl

Advertisment

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளைஏப்ரல் மாதத்தில், வழக்கம்போல இந்திய மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்ட நிலையில், நாட்டில் மீண்டும் கரோனாபாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மொத்த ஐபிஎல் போட்டிகளையும் மஹாராஷ்டிராஅல்லது குஜராத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிடுவதாகவும், ஐபிஎல் போட்டிகளைஇந்த முறை வெளிநாடுகளில் நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில்தற்போது கரோனாபாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்காரணமாகஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசுகள் அனுமதி வழங்குமாஎனச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் ஐபிஎல் போட்டிகளைவெளிநாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசனை தொடங்கியுள்ளதாகப் பிசிசிஐ வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கரோனாகாரணமாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரும், 2021ஆம் ஆண்டின்ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe