Skip to main content

மீண்டும் வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்?

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

ipl

 

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் மாதத்தில், வழக்கம்போல இந்திய மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்ட நிலையில், நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மொத்த ஐபிஎல் போட்டிகளையும் மஹாராஷ்டிரா அல்லது குஜராத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிடுவதாகவும், ஐபிஎல் போட்டிகளை இந்த முறை வெளிநாடுகளில் நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இந்தநிலையில் தற்போது கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசுகள் அனுமதி வழங்குமா எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசனை தொடங்கியுள்ளதாகப் பிசிசிஐ வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன.

 

ஏற்கனவே கரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரும், 2021ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.