Skip to main content

பிசிசிஐ -யின் புதிய முடிவு... அதிருப்தியில் ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள்...

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்த மாத இறுதியில் மும்பையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

bcci halves ipl prize money

 

 

கடந்த ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் வெற்றிபெற்ற அணிக்கு ரூ.25 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடியும், அடுத்த இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 6.25 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு மொத்தமாக 50 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு, முதல் நான்கு இடங்களுக்கான மொத்த பரிசுத்தொகை 25 கோடி ரூபாயாக குறைக்கப்படுவதாக பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அதன்படி, கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12.5 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6.25 கோடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.3 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ -யின் இந்த முடிவு ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக விரைவில் அணி உரிமையாளர்கள் பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story

தோனியின் அடையாளம் இனி யாருக்கும் கிடையாது.. என்ன செய்திருக்கிறது பி.சி.சி.ஐ?

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
No one knows Dhoni's identity anymore.. What has BCCI done?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க காலத்தில் ரயில்வேயில் டிடிஆர் ஆக பணியாற்றிய தோனி, பிறகு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் தோல்வியை மட்டும் சந்தித்த தோனி, அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடி தனது கடும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டன் வரை வளர்ந்தார். 

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய உலகக்கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது. அதன் காரணமாகவே, தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், ‘கூல் கேப்டன்’, ‘பெஸ்ட் ஃபினிஸர்’ எனவும் ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி, கேப்டனாக தலைமையேற்று 4 கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும், பல தொடர்களில் இந்திய அணிக்காக வெற்றிகளை வாரி வழங்கியுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதலே தோனி ஜெர்ஸி எண் 7ஐ அணிந்து விளையாடி வந்தார். தோனி பிரபலமடைந்ததைப் போல, அவருடைய ஜெர்ஸி எண்ணும் பிரபலமடைந்தது. தோனியின் ஜெர்ஸி நம்பரான ‘7’ ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் கொண்டிருந்தது. இதனையடுத்து, பல சாதனைகளை படைத்த தோனி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்றிருந்த போதிலும், அவருடைய ஜெர்ஸி நம்பரான 7 இதுவரை எந்த வீரருக்கு அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தோனியின் ஜெர்ஸி நம்பர் ‘7’க்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டிற்கு, முன்னாள் கேப்டன் தோனி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், ‘7’ஆம் நம்பர் பொறித்த ஜெர்ஸியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் இனி பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக முன்னாள், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில், அவரது 10ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிசிசிஐ ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.