Skip to main content

இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடரில் திடீர் மாற்றம்!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

ROHIT SHARMA

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

 

அதன்படி இந்தியாவும், இலங்கையும் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அதன்பின்னர் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும் மோதவிருந்தன. இந்நிலையில் பிசிசிஐ இந்த அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், இலங்கையும் முதலில் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து பகலிரவு டெஸ்ட் உட்பட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளன.

 

ROHIT SHARMA

 

இரு அணிகளும் மோதும் இருபது ஓவர் தொடர் இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது. அதனைதொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. மார்ச் 12 ஆம் தேதி இந்தியா, இலங்கையிடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. 

 

 

Next Story

சுழன்ற சூர்யகுமார் யாதவ்வின் பேட்; சதமடித்து அசத்தல்; இந்தியா அபார வெற்றி

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Suryakumar Yadav's bat spun; 100% wacky; India won big

 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

 

டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தனர். 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய நிலையில், ராகுல் திரிபாதி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் தனது பேட்டை சுழற்ற அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

 

16 ஓவர்களில் இந்திய அணி 163 ரன்களை எட்டிய நிலையில் சுப்மன் கில் 46 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் சதமடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 112 ரன்களை எடுத்தார். அதில் 7 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடக்கம்.

 

இதன் பின் இமாலய இலக்கைக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், உம்ரான் மாலிக், சாஹல், பாண்டியா தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ்வும் தொடர் நாயகனாக அக்‌ஷர் படேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

Next Story

அதிரடிக்கு பஞ்சமில்லாத ராஜ்கோட் மைதானம்; மூன்றாவது டி20 வெற்றி யாருக்கு?

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Rajkot Stadium is not short of action; Who won the third T20?

 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

 

டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெறக் கடுமையாக முயற்சிக்கும். 

 

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்ப்ளேயில் அதிக ரன்களை எடுத்துக் கொடுத்தால் இந்திய அணி மிடில் ஓவர்களில் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இலக்கை நிர்ணயிக்க ஏதுவாக இருக்கும். பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசும் அர்ஷிதீப் சிங் இரண்டாவது டி20 போட்டியில் அதிகமான நோ பால்களை வீசி ஒட்டு மொத்த அணிக்கும் டென்ஷன் ஏற்றினார். இன்றைய போட்டியில் கேப்டன் ஹர்திக் அணியில் அர்ஷ்தீப்பினை கொண்டு வருவாரா அல்லது ஹர்ஷல் படேலை கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றபடி ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் சிறப்பான பார்மில் உள்ளார். இன்றைய போட்டியிலும் அவர் அசத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம்.

 

இலங்கை அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஷனகா இன்றைய போட்டியில் எந்த ஒரு மாற்றத்தையும் அணியில் ஏற்படுத்தமாட்டார் எனத் தெரிகிறது.

 

மூன்றாவது டி20 நடைபெறும் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இம்மைதானத்தில் நடந்த 4 டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அணிகளும் இரண்டு போட்டிகளில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளும் வென்றுள்ளன. 

 

இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: இஷான் கிஷன், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்/ஹர்ஷல் படேல், யஸ்வேந்திர சாஹல்

 

இலங்கை அணியின் உத்தேச வீரர்கள்: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(சி), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க