Skip to main content

பேபி சிட்டர் விளம்பரத்தால் கோபமான ஹெய்டன்...

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 

வருகின்ற 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை மையப்படுத்தி இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், சேவாக்கை வைத்து பேபி சிட்டர் விளம்பரத்தை எடுத்துள்ளது. 

 

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. போட்டிகளின்போது இரு அணி வீரர்கள் இடையிலான ஸ்லெட்ஜிங் அதிக கவனம் பெற்றது.குறிப்பாக, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை, ‘பேபி சிட்டர்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.
 

இந்த சம்பவத்தை மையபடுத்திதான்  ‘பேபி சிட்டர்’விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்திவ் ஹெய்டன் தன்னுடைய கண்டனத்தை ட்விட்டரில், “உங்களை எச்சரிக்கிறேன். ஆஸ்திரேலியர்களை ஒருபோதும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளாதீர்கள்,  விரு பாய். உலகக்கோப்பை யாரிடம் இருக்கிறது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 


 

Next Story

ஷேவாக்கை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Virat Kohli pushed back Sehwag test cricket

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியானது,  மூன்றாம் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, 1 - 0 என்ற புள்ளியில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

 

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்  அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் ( ஜூலை 20)  தொடங்கியது. இதில், டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினார்கள்.

 

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இதில் ரோகித் சர்மா  80 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முந்தைய டெஸ்ட் தொடரில், இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து இரு டெஸ்ட் தொடர்களிலும் செஞ்சுரி பார்ட்னர்சிப் அமைத்துத் தந்த இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மாவும், யஷஸ்வியும் பெற்றுள்ளனர்.

 

இதையடுத்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் களம் இறங்கினார்கள். மிகவும் எச்சரிக்கையாக ஆடிய விராட் கோலி தனது 21வது பந்தில் தான் தனது முதல் ரன்னை எடுத்தார்.தொடர்ந்து ஆடிய விராட் கோலி தனது சதத்தை நிறைவு செய்வதற்க்குள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 84 ஓவர்களில்  4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்தது.  விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து  பேட்டிங் செய்தனர்.

 

போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதன் மூலம் 111 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் விராட் கோலி இதுவரை 29 சதம் உள்பட 8,676 ரன்களை சேர்த்துள்ளார். அந்த வகையில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களும், இரண்டாவது இடத்தில் ராகுல் டிராவிட் 13,288 ரன்களும், மூன்றாவது இடத்தில் கவாஸ்கர் 10,122 ரன்களும், நான்காவது இடத்தில்  வி.வி.எஸ்.லட்சுமணன் 8,781 ரன்களும் எடுத்து முதல் 4 இடத்தில் உள்ளனர். இதில்,விராட் கோலி தனது 32 ரன்களை எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 5 வது இடத்தில் இருந்த ஷேவாக்கை (8,586) பின்னுக்கு தள்ளினார்.

 

அதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள், மற்றும் 20 ஓவர் போட்டியைச் சேர்த்து) விராட் கோலி ஆடிய 500வது ஆட்டம் இதுவாகும். 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்த முதல் வீரர் விராட் கோலி தான். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 29வது சதத்தை அடித்த விராட் கோலி, டெஸ்டில் அதிக சதங்களை எடுத்தவர்களின் பட்டியலில் 16வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா வீரர் ஜாம்பவான் டான் பிராட்மேனை சமன் செய்துள்ளார்.

 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி 121 ரன்களை எடுத்த விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் 79வது சதமாகப் பதிவானது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்களின் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.

 

 

Next Story

ரயில் விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற சேவாக்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Sehwag  bear education expenses  children who lost their parents Odisha train accident

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள நிலையில் 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை அடையாளம் காண சடலங்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இணையதளங்களிலும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த துயரமான நேரத்தில் ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்த கல்வி அறிவு கொடுப்பதுதான். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன். மேலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் குழுவினருக்கும் ரத்த தானம் செய்ய முன்வந்தவர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்” என ட்விட் செய்துள்ளார்.