Advertisment

ஆசிய ஹாக்கி போட்டி; இந்தியா அபார வெற்றி

NN

Advertisment

ஆசிய ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் 2 கோல்களையும், ஜக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் தலா ஒரு கோல்களையும் அடித்தனர். இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் மலேசியா, கொரியா, ஜப்பான் அணிகளுடன் இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத்தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது பாகிஸ்தான் அணி.

Chennai sports
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe