Skip to main content

ஏசியன் கேம்ஸில் கலக்கிய எளியோர்...

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

தற்போது நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பல பதக்கங்களை வாங்கியுள்ளது பெருமைக்குறிய விஷயம்தான். ஜகர்டாவில் நடந்த இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கத்தை வாங்கியுள்ளது. அதில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெங்களம் பதக்கங்களாகும். சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய அளவிலான பதக்க குவியல்கள் அல்ல. ஆனால், அவர்களை போன்று பதக்கங்களை வருங்காலத்தில் இந்தியா குவிப்பதற்கு இது ஒரு நல்ல ஆரம்பம். இந்த வருட ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய பலரும் தங்களுடைய திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர் என்று பல சீனியர் விளையாட்டு ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இது போன்றே நல்ல மாற்றத்தை இந்திய வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவோம். இந்தியா இதுவரை தடகளப்போட்டிகளில் இவ்வளவு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால், இம்முறை இதுவும் சாத்தியமாகியுள்ளது. இந்த ஆசிய போட்டியில் எளியோர், இளம் வீராங்கனை, உடல்நிலை சரியில்லாமல் அதிலிருந்து மீண்டு வந்தோர் என்று பலதரப்பிலான விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று பதக்கங்களை பெற்று இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அதில் இரு சாதாராண விவசாய பின்னணியைக்கொண்ட இரு பெண்களை பற்றி தெரிந்துகொள்வோம்....
 

hima dass


ஹிமா தாஸ், இந்தியர்கள் பலருக்கும் மிகவும் பரிச்சயமானவர். கடந்த ஜுலை மாதம் நடந்த 20 வயதுகுட்பட்டோர் உலக தடகள போட்டியின் 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை பெற்று, தேசிய கீதம் இசைக்கும் போது கண்ணீர் கசிந்து, இந்தியர் அனைவரையும் நெகிழச்செய்தவர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலஙகளில் ஒன்றான அஸ்ஸாமில் சாதாரான விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அதிலும் தடகள ஒட்டத்தை ஒரு வருடம் மட்டுமே முறையாக பயிற்ச்சி எடுத்து, அடுத்த ஒரு வருடத்தில் தங்க பதக்கத்தையே வென்று காட்டியவர் ஹிமா தாஸ். தற்போது நடந்து முடிந்த ஆசியா விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் இந்த விவசாயின் மகள். இதன் பிறகு ஹிமாவின் ஓட்டத்திற்கு பல ரசிகர்கள், பல விளையாட்டு வீரர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்குள் இருக்கிறார். 2020 டொக்யோ ஒலிம்பிக்கில் இவர் கண்டிப்பாக எதேனும் ஒரு சாதனையை, பெருமையை இந்தியாவுக்கு தேடி தருவார் என்கிற நம்பிக்கையில் பலர் இருக்கின்றனர்.  
 

swapna


ஸ்வப்னா பர்மன், 21 வயது மேற்கு வங்க பெண். ரிக்‌ஷாஓட்டுநரான தந்தை கடந்த 2013ஆம் ஆண்டில் உடல்நிலை குறைவால் படுத்தபடுக்கைக்கு சென்றுவிட்டார். தாய் தேயிலை தோட்ட தொழிலாளி. தினசரி வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக இருந்தபோதிலும் தன்னுடைய விளையாட்டு பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். குடும்ப சுழ்நிலைதான் இவரது கவனத்தை திசை திருப்புகிறது என்று பார்த்தால் இவரின் பாதமும் இவரை திசை திருப்பியுள்ளது. சாதாரணவர்களுக்கு இருப்பது போன்று 5 விரல்கள் இல்லாமல் 6 விரல்கள் இவருடைய காலில் இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பு காலால், இவருக்கு தேவையான காலணி இல்லாமல் தன்னுடைய கால் விரல்களை நெறுக்கும் காலணிகளை அணிந்து போட்டியில் கலந்துள்ளார். ஆசிய போட்டியில் கலந்துகொள்ளும் போதே பல் வலியால் அவதிப்பட்டு, கண்ணத்தில் ப்ளாஸ்த்திரி ஒட்டி விளையாடினார். இவர் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்ற போட்டி ஒன்றும் சாதாராணதல்ல, எழு தடகள போட்டிகளை கொண்டது. இப்போட்டிக்கு ஹெப்டத்லான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட போட்டியில், தன்னுடைய துயரங்கள், கால் வலி, பல் வலி என்று தன்னை சூழ்ந்திருந்த அத்தனை நெகிட்டிவையும் பாஸிட்டிவ்வாக்கி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். ஸ்வப்னாவிற்கு ஆசிய போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் முதுகு வலி இருந்தது. அதனை பிசியோ வைத்து சரி செய்ய உதவியர் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சச்சினுக்கு முதுகுவலி சிகிச்சை பார்த்தவரை அழைத்து ஸ்வப்னாவிற்கும் சிகிச்சையளித்துள்ளார் டிராவிட். இவருடைய கிராமத்தில் உள்ள செம்மன் சாலையில்தான் இவர் தடகளமாக பயன்படுத்தி ஓட்டப்பந்தயத்தை கற்றுக்கொண்டுள்ளார் . ஸ்வப்னா வீடு திரும்பியவுடன் அவரை பார்க்க பல விஐபிக்கள் அவருடைய வீட்டிற்கு வருவார்கள் என்பதால், அந்த கிராமத்தின் மாவட்ட நிர்வாகம் செம்மன் சாலையை கான்கீரிட் சாலைகயாக மாற்றி வருகிறது. இவருடைய சிறப்பு காலுக்கு சிறந்த காலணி செய்து தருவதாகவும் ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வாழ்க்கையே தடைகளப்போட்டி போன்று சிரமமாக இருந்தவர்களுக்கு இந்த வெற்றிகளின் மூலம் விளையாட்டில் மட்டுமே தடகளமாக மாற இருக்கிறது. 
   

Next Story

பாரா ஆசியப் போட்டி; சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர் 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Para Asian Tournament; A Tamil Nadu player with a record

 

பாரா ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் என்பவர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

 

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் பாரா ஆசியப் போட்டியில் நீளம் தாண்டுதல் டி.64ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் என்பவர் இந்தியாவுக்கு விளையாடினார். இந்தப் போட்டியில் அவர் 6.80 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை அடைந்தார். இதன் மூலம் நீளம் தாண்டுதல் டி64-ல் தர்மராஜ் சோலைராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில், இலங்கை வீரர் மத்தக கமாகே 6.68 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தையும், ஜப்பான்  வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர். 

 

ஆசிய மற்றும் பாரா விளையாட்டு போட்டியில் டி.64 பிரிவில் தற்போது தர்மராஜ் சோலைராஜ் பெற்றிருக்கும் 6.80 என்பதே சாதனையாக உள்ளது. 

 

Para Asian Tournament; A Tamil Nadu player with a record

 

அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி எனும் பேட்மிட்டன் வீரர் மகளில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

 

வில்வித்தை போட்டியில் ஷீதல் தேவி எனும் வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். பாரா ஆசியப் போட்டியில் வில்வித்தையில் பெண் வீரர் இரு தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

CM MK Stalin praised Minister Udayanidhi Stalin

 

சீனாவின் ஹாங்சூவில் கடந்த 23.09.2023 முதல் 8.10.2023 வரை நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர். இதனையடுத்து சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 9 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) வழங்கி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதற்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு பதக்கங்களை வென்ற 20 விளையாட்டு வீரர்களுக்கு இன்று 9 கோடியே 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை பரிசுகள் வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அகில இந்திய அளவிலே, உலகளவிலான போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடர் வெற்றிகளைப் பெறுவதும்தான் உங்களுக்கும் பெருமை. நமது தமிழ்நாட்டுக்கும் பெருமை. ஏன் இந்தியாவிற்கே பெருமை. இந்தப் பாராட்டு உங்களுக்கும் உங்களது வெற்றிக்கும் மட்டுமல்ல, நீங்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ஊக்கமளிக்கவும், உங்களைப் போல இன்னும் பல வீரர்கள் உருவாக அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் தான் உங்களைப் பார்த்து இன்னும் ஏராளமான வீரர்களும் வீராங்கனைகளும் உருவாவார்கள் என நம்புகிறேன்.

 

CM MK Stalin praised Minister Udayanidhi Stalin

 

எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசானது அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று. இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார். அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

 

இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்கள் அசோக் சிகாமணி, இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.