Skip to main content

ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் பல சாதனைகள்... சில வேதனைகள்….

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

பல அற்புதங்கள் மற்றும் ஆச்சரியங்கள் கொண்ட இந்த வருட ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 6 நாடுகள் கலந்து கொண்ட ஆசியக் கோப்பையில் இந்த வருடம் பரபரப்புக்கு பஞ்சமில்லை. பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் எளிதாக வென்றது இந்தியா. குட்டி ஹாங் ஹாங் அணியுடன் நடந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா சமன் மட்டுமே செய்தது. வங்கதேச அணியுடன் நடந்த இறுதி போட்டியில் போராடி வென்றது. பல சாதனைகளை இந்திய அணி படைத்திருந்தாலும், சில வேதனைகளையும் கடந்துதான் வெற்றி பெற்றது. ஒருபுறம் இந்திய அணிதான் இந்த ஆசியக் கோப்பை போட்டியின் சிறந்த அணி என்ற போதிலும், இன்னும் மேம்பட வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளது என்பதே உண்மை. 

 

as

 

 

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கோலி இல்லாமல், இந்திய அணி வென்றது கண்டிப்பாக சாதனைத்தான். ரோஹித் ஷர்மா தலைமையில் களம்கண்ட இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் புரிந்தது. எம்.எஸ்.தோனி ஆசியக் கோப்பை போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து, சங்ககரா சாதனையை முறியடித்தூள்ளார் (எம்.எஸ்.தோனி (12), சங்ககரா (10)). ரோஹித் ஷர்மா, தான் கேப்டனாக இருந்த முதல் நான்கு தொடர்களிலும் வென்று ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்தூள்ளார். எம்.எஸ்.தோனி இதுவரை சர்வதேச போட்டிகளில் 800 வீரர்களை தனது விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்து, மார்க் பௌசர் மற்றும் கில்கிரிஸ்ட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். தோனி 200–வது போட்டியில் கேப்டனாக, இந்த வருட ஆசியக் கோப்பையில் விளையாடியது அவரின் இரசிகர்களுக்கு சிறப்பானது.

 

as

 


ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வென்றதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் 700-வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா அதிகபட்சமாக ஆசியக் கோப்பை ஒரு நாள் தொடரை 6 முறையும், டி 20 தொடரை ஒரு முறையும் வென்றுள்ளது. அடுத்த படியாக இலங்கை 5 முறை ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியாக, தான் கலந்து கொண்ட 11 ஆசியக் கோப்பை போட்டிகளில் ஒரு முறைகூட இந்திய அணி தோற்கவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 போட்டிகளில் 10 விக்கெட்கள் எடுத்து உள்ளார். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் 5 போட்டிகளில் 6 விக்கெட்களும், ஜாஸ்ப்ரிட் பும்ராஹ் 4 போட்டிகளில் 8 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்தர ஜடேஜா மற்றும் சாஹல் ஆகியோர் இணைந்து 23 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

 


இந்திய அணியின் தொடக்க இணையைப் பொறுத்தவரை சிறப்பாக அனைத்து ஆட்டங்களிலும் வெளிப்படுத்தி உள்ளனர். மிடில் ஆர்டர் பேட்டிங் பொறுத்தவரை சிறப்பாக இல்லாவிட்டாலும், ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங். பெரிய வேகப்பந்து வீச்சு இல்லாத அணிகளிடம் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்புவது பெரிய பலவீனமாக உள்ளது. மேலும் ஹர்டிக் பாண்டியா தவிர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாதது கவனிக்கபட வேண்டிய ஒன்று. 

 

 

கேதர் ஜாதவ் 6-வது பௌலராக சிறப்பாக செயல்பட்டபோதிலும், 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அவசியமாக கருதப்படுகிறது. புவனேஷ், பும்ராஹ் தவிர வேகபந்து வீச்சில் வலுவான பந்து வீச்சாளர்கள் இல்லை. மேலும், நம்பர் 4 மற்றும் 6-வது இடங்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. 8 மாதங்கள் மட்டுமே உலக கோப்பை போட்டிக்கு உள்ளதால் இந்த பலவீனங்களை விரைவாக சரிசெய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளது இந்திய அணி. 
 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.