Advertisment

ஆசியக் கோப்பை இறுதி போட்டி; 50 ரன்களில் சுருண்ட இலங்கை அணி!  

Asia Cup Final; Sri Lankan team wrapped up in 50 runs!

ஆசியக் கோப்பை 2023கிரிக்கெட்போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில்லீக்சுற்றின் முடிவில்சூப்பர்4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,வங்காளதேசம்அணிகள் தகுதி பெற்றன.

Advertisment

இதில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள்இறுதிபோட்டிக்குதகுதியாகி இன்று இலங்கையில் உள்ளபிரேமதாசாஸ்டேடியத்தில்மோதிவருகின்றன. இந்த இறுதி ஆட்டத்தில்டாஸ்வென்ற இலங்கை அணிபேட்டிங்கைதேர்வு செய்து விளையாடிவருகிறது.

Advertisment

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி துவக்கம் முதலேவிக்கெட்களைஇழந்து மோசமான ஆட்டத்தைவெளிப்படுத்திவந்தது. இந்நிலையில், இலங்கை அணி 15.2ஓவர்களில்50ரன்கள்எடுத்து தனது பத்துவிக்கெட்களையும்பறிகொடுத்தது. இதில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமதுசிராஜ்ஆறுவிக்கெட்களைஎடுத்தார்.

இதனையடுத்து இந்திய அணி 51ரன்கள்எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாட இருக்கிறது. ஆசியக் கோப்பையின் நடப்புசாம்பியன்இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe