Skip to main content

"புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" ஐசிசி கேள்விக்கு அஸ்வின் பதில்...

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

''கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைப்பது யாரை?'' என ஐ.சி.சி. கேட்டிருந்த கேள்விக்கு வடிவேலுவை வைத்து கிண்டல் பதில் ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். 

 

ashwin reply to icc with vadvelu charecter

 

 

உலகம் முழுவதும் கரோனாவால் முடங்கிப்போயுள்ள நிலையில், சாமானியர் முதல் செலிபிரிட்டிகள் வரை தங்களது நேரத்தை சமூகவலைத்தளங்களிலேயே அதிகம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் நேர்காணல்கள் செய்வது, மக்களுடன் கலந்துரையாடுவது என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், பல பொழுதுபோக்கு நிறுவனங்களும் சமூக ஊடங்களில் பிஸியாக இயங்கி வருகின்றனர்.
 

NAKKHEERAN APP



அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான ஐசிசி, தனது சமூக ஊடக பக்கத்தில், ''கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர், சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைப்பது யாரை?'' என கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களின் பெயரை பதிலாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இதற்கு பதிலளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், “கோவில் படத்தில் வரும் புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கிண்டலாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல்,  ''திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்'' என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதற்கு ரசிகர்களும் பல்வேறு கிண்டலான பதில்களை அளித்து வருகின்றனர். 

 

 

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings Prime Minister Modi for Ashwin's record of taking 500 wickets

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அசாதாரண மைல்கல்லை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.