Skip to main content

'மன்கட் முறை அவுட்' பற்றி ரிக்கிபாண்டிங் கூறியது... மனம் திறக்கும் அஷ்வின்!!!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

ashwin

 

கடந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், ராஜஸ்தான் அணிவீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அஷ்வினின் இந்தச் செயலானது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கிரிக்கெட் விதிப்படி அஷ்வினின் செயல் சரியானதுதான் என்று அவருக்கு ஆதரவாக அந்நேரத்தில் சிலர் கருத்தும் தெரிவித்தனர். அதன் பின்பு நடந்த ஏலத்தில் அஷ்வின் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்னால் டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கிபாண்டிங், இனி மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்ய வேண்டாம் என அஷ்வினிடம் கூறியுள்ளேன் என்றார்.

 

இது குறித்து தற்போது பேசியுள்ள அஷ்வின், ரிக்கிபாண்டிங்கிடம் தொலைபேசியில் இது குறித்து பேசினேன். அவர் இன்னும் துபாய் வரவில்லை. அவர் இங்கு வந்ததும் நாங்கள் அனைவரும் அவருடன் அமர்ந்து பேசுவோம். அவரும் என்னுடன் பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவருடன் தொலைபேசியில் பேசியதே சுவாரசியமாக இருந்தது. அடுத்த வாரம் அவருடன் நேரில் பேசிவிட்டு உங்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கிறேன். ஏனென்றால் சில நேரங்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது அது தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படும். அவர்கள் விளையாட்டாகச் சொல்லும் விஷயங்கள் கூட சில நேரங்களில் செய்தியாகிவிடும்" என்றார்.

 

அடுத்த மாதம் 19- ஆம் தேதி தொடங்க இருக்கிற ஐ.பி.எல் தொடருக்காக அனைத்து அணிவீரர்களும் தற்போது அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு தனிமைப்படுத்தலுக்கான காலம் நிறைவடைந்தவுடன், தங்கள் பயிற்சியைத் தொடங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings Prime Minister Modi for Ashwin's record of taking 500 wickets

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அசாதாரண மைல்கல்லை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.