ADVERTISEMENT
மேலும், அண்மையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி என்பதும், கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது வென்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரி வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
அதோடு 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், மல்யுத்தம் பயிற்சியாளர் லலித் குமார், பாரா தடகள பயிற்சியாளர் மகாவீர் பிரசாத், ஹாக்கி பயிற்சியாளர் ஷிவேந்திர சிங், மல்லர் கம்பம் பயிற்சியாளர் கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Show comments