Skip to main content

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் மகனை மணமுடித்த சானியா மிர்சாவின் தங்கை...

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் தங்கை அனம் மிர்சா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணமுடித்துள்ளார்.

 

anam mirza ties knot with asad azharuddin

 

 

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். அவரது தங்கையான அனம் மிர்சாவும் கிரிக்கெட் குடும்பத்திலேயே மணமுடித்துள்ளார். அனம் மிர்சாவும், அசாருதீனின் மகனான முகமது அசாதுதீனும் கடந்த சில மாதங்களாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. 

 

Next Story

டேட்டிங் செய்த நடிகையுடன் திருமணம் - சானியா மிர்சாவை பிரிந்த கிரிக்கெட் வீரர்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Sania Mirza divorce Shoaib Malik and Shoaib Malik marriage Pakistan actress

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக், 2006ஆம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து, அதே ஆண்டு டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக சமீப காலமாக தகவல் வெளியானது. ஆனால் இருவரின் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனிடையே சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் டேட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, கணவரை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

Next Story

“இந்தக் கடினமான நேரத்திலும் உடன் இருக்க வேண்டும்” - மல்யுத்த வீரர்களுக்கு சானியா மிர்சா ஆதரவு

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

harbhajan singh and saniya mirza give them support to sakshi malik and vinesh bogat for indian wrestlers issue 

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும். அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

harbhajan singh and saniya mirza give them support to sakshi malik and vinesh bogat for indian wrestlers issue 

 

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், "சாக்‌ஷி, வினேஷ் ஆகியோர் இந்தியாவின் பெருமையாளர்கள். நான் ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில், தெருவில் இறங்கி போராடி வரும் நம் தேசத்தின் பெருமையாளர்களை கண்டு வேதனை அடைகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் சானியா மிர்சா தனது ட்விட்டரில், "ஒரு விளையாட்டு வீரர் என்பதை விட ஒரு பெண்ணாக இதைப் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் நாட்டிற்கு விருதுகளை வாங்கி வந்தனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களையும் நாம் கொண்டாடினோம். அவர்கள் விருது வாங்கி வந்தபோது நீங்கள் கொண்டாடினீர்கள் என்றால் தற்போது அவர்களின் கடினமான நேரத்திலும் அவர்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இது மிகவும் உணர்வுகரமான விஷயம். அது மட்டுமின்றி முக்கிய குற்றச்சாட்டுகளையும் கொண்டது. உண்மை எதுவாக இருந்தாலும் விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.