Skip to main content

கங்குலி தான் பெஸ்ட்... தோனி நெக்ஸ்ட்தான்...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

2000-ஆம் ஆண்டுகளில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது. பல அதிர்ச்சியான நிகழ்வுகளால் சில கிரிக்கெட் அணிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய அணியும் ஒன்று. பல மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

 

sourav gaguly

 

புதிதாக அணியை கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையிலும், பல கடினமான தொடர்களை சந்திக்க வேண்டிய நிலையிலும் இந்திய அணிக்கு தலைமையேற்க கங்குலி என்னும் அசாத்திய திறமை கொண்ட ஒரு லீடர் கிடைத்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அது மிகப்பெரிய திருப்புமுனை.
 

“வீட்டுல புலி; வெளில எலி” என்பதைப் போல சொந்த மண்ணில் வெளுத்துக் கட்டும் பல கிரிக்கெட் அணிகள், வெளிநாடுகளில் மண்ணைக்கவ்வி கொண்டு திரும்பி வரும். இந்த லிஸ்டில் இந்திய அணியும் விதிவிலக்கு இல்லை. 1990-களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் ஓரளவு இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மிகவும் மோசமாகவே இருந்துவந்தது. அந்த மோசமான வரலாற்றை கங்குலி தலைமையின்கீழ் மாறத் துவங்கியது. 
 

பல திறமையான வீரர்களைக் கொண்டிருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி, 1990-2000 காலகட்டங்களில் பல தொடர்களில் மிகவும் மோசமான தோல்விகளை அடைந்துவந்தது. அதற்கு பிறகு பொறுப்பேற்ற கங்குலி பல மாற்றங்களை கொண்டுவந்தார். போராடும் குணத்தையும், எந்த நாட்டிலும் எந்த போட்டியிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். வீரர்களின் தனிப்பட்ட திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை பயன்படுத்தினார். வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் போன்ற பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கிரிக்கெட்டிற்கு அடையாளப்படுத்தினார்.
 

பின்னர் கேப்டன் தோனி இந்தியாவை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கினார். கங்குலியின் வேலையை சிறப்பாக தொடர்ந்து செய்தார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்ற அணுகுமுறையுடன் அனைத்து போட்டிகளிலும் களம் கண்டார். பல கோப்பைகளை வென்று சிறந்த கேப்டனாக உருவெடுத்தார். பின்னர் வந்த கோலி தோனியின் வேலைகளை தொடர்ந்த போதிலும் பல இடங்களில் ஆக்ரோஷமாக இந்திய அணியை வழிநடத்தினார். 
 

கோலியின் அணி எந்த போட்டியையும் இழக்க விரும்புவில்லை. ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் களம் கண்டு வருகிறது. விராட் கோலி பதவியேற்று சிறிது காலம்தான் ஆகியுள்ளது என்றாலும், அவரின் ஆக்ரோஷமான அணுகுமுறையும், அவரது அணி வீரர்களின் விடாமுயற்சியும் முன்னாள் இருந்த இந்திய அணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் உள்ளது. 

 

yuvaraj

 

அனைத்து கேப்டன்களுமே அந்தந்த காலகட்டங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதே உண்மை. இந்த நிலையில் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய போது கங்குலி, தோனி என்ற வரிசையில் சேவாக் கூறியுள்ளார். சவுரவ் கங்குலி தான் நம்பர் 1 கேப்டன். தனது அணி வீரர்களிடமிருந்து 100% திறமையை வெளிக்கொண்டு வருவது மற்றும் அவர்களின் திறமையை அறிந்து செயல்படுபவரே சிறந்த தலைவர் என சேவாக் கூறியுள்ளார். 
 

ஒரு சிறந்த இந்திய அணியை கட்டமைக்க கங்குலி கேப்டனாக பெரிதும் உதவியுள்ளார். கங்குலி தலைமையில் இந்தியாவில் மட்டுமல்லாது; வெளிநாடுகளிலும் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. பல கேப்டன்களை ஒப்பிடுகையில், தனிப்பட்ட பாணியில் கங்குலி மிகவும் சிறந்தவர் என்று சேவாக் கூறினார். 
 

கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் இரண்டு உலகக் கோப்பை தொடரில் சேவாக் விளையாடியுள்ளார். தோனி தலைமையில் இறுதிப்போட்டியில் வென்ற அணியிலும், கங்குலி தலைமையில் இறுதிப்போட்டியில் விளையாடிய அணியிலும் இடம்பெற்றவர் சேவாக்.

 

 

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

அவமதிப்பு வழக்கு; எம்.எஸ்.தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Supreme Court orders MS Dhoni for Contempt case

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி, அங்கும் தோனி மீது அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய வசதியாகத் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைக்கும் தடை விதித்துள்ளது.