Skip to main content

தோனியை டீமில் சேர்த்துப்பேன்...கோலி...? - டி வில்லியர்ஸ்

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று விதமான உலக கோப்பை போட்டிகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி. கேப்டன்ஷிப்பில் தனக்கென்று தனி பாணியை கொண்டவர். பல்வேறு சாதனைகளை கேப்டனாகவும் வீரராகவும் படைத்தவர். உலகின் சிறந்த பினிஷர் என்றும் அறியப்பட்டவர். அப்படிப்பட்ட தோனியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து, சமீப காலங்களாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

 

dd

 

1994 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நயன் மோங்கியா இருந்தார். 140 ஒரு நாள் போட்டிகளிலும் 44 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதற்கு பிறகு 2004-ஆம் ஆண்டு வரை மன்னவா பிரசாத், சபா கரீம், விஜய் தாஹியா, சமீர் திஹே, தீப் தாஸ்குப்தா, அஜய் ரத்ரா, பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக்  என 8 விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் விளையாடியுள்ளனர். ஆனால் யாரும் பெரிய அளவில்  விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் ஜொலிக்கவில்லை. 

 

அந்த காலகட்டத்தில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.தோனி.  பிறகு உலகின் சிறந்த விக்கெட் கீப்பர், மிக சிறந்த பினிஷர் மற்றும் பெஸ்ட் கேப்டனாக விளங்கினார். ஆனால் தற்போது பேட்டிங் பர்ஃபாம் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் தோனி. ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் தோனியின் இடம் குறித்து இரு தரப்பட்ட கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

 

இந்த நிலையில் ஒரு நாள் போட்டிகளில் தோனியின் இடத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் “வருடத்தின் ஒவ்வொரு நாளும் தோனி என்னுடைய அணியில் விளையாடுவார். 80 வயதானாலும், வீல்சேரில் வந்தாலும் என்னுடைய கனவு அணியில் தோனிக்கு இடமுண்டு. தோனி ஒரு சிறந்த வீரர். அவருடைய சாதனைகளை பார்த்தாலே தெரியும். அவரை போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து விலக சொல்கிறீர்களா? நீங்கள் வேண்டுமானால் அந்த மாதிரி சொல்லலாம். ஆனால் நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன்” என்றார்.

 

dd

 

மேலும் விராட் கோலியை பற்றி கூறிய டி வில்லியர்ஸ் “கோலி கேப்டனாக சில வருடங்களாக தன்னுடைய தவறுகளில் இருந்து கற்று கொள்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது எங்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. விளையாட்டை பற்றி எங்களுக்குள் ஒரே விதமான எண்ணங்கள் உள்ளன. அதை நாங்கள் மகிழ்ச்சியாக கருதுகிறோம். அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சி. கோலிக்கு ரொனால்டோ ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் ரொனால்டோ; நான் மெஸ்ஸி” என்றார்.

 

பல புது வகையான ஷாட்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகபடுத்தி ரசிகர்களை தன் வசபடுத்தியவர் தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ். ஸ்பைடர் மேன், மிஸ்டர்.360, சூப்பர் மேன் என பல புனை பெயர்களுக்கு சொந்தகாரர்.  அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் தான் டி வில்லியர்ஸ். இந்த வருடம் மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.