Skip to main content

குறைத்து மதிப்பிடப்பட்ட பொறுமையின் நாயகன்... பெரிதும் கொண்டாடப்படாத சாந்தமான சாதனையாளர்...

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

2011-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்து வரலாற்றில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதற்கு பிறகு சச்சின், டிராவிட், லட்சுமணன், கம்பீர் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றது இந்திய அணி. 

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் உலகின் டாப் கிளாஸ் டெஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோரின் பவுன்ஸர்கள், ஸ்விங், லென்த், சீம் பவுலிங் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. ஒருமுனையில் விக்கெட்கள் வரிசையாக விழுந்தது. 5வது வீரராக களமிறங்கிய ரஹானே மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார். 

 

ajinkya rahane and indian cricket team

 

 

தனது பொறுமையான பேட்டிங் மூலம் இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருந்தார். அந்த போட்டியில் வெளிநாட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது.   

முதன்முறையாக 2011-ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் ரஹானே. மூத்த வீரர்கள் அணியில் விளையாடி வந்ததால் 16 மாதங்கள் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

12-வது வீரராக இந்திய அணியில் தனது பணியை பாகுபாடு இன்றி செய்தார். 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடினார். முதல் போட்டியில் சரியாக விளையாடாத ரஹானே அடுத்த டெஸ்ட் போட்டியை 9 மாதங்களுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். அந்த தொடரின் முதல் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த ரஹானே அடுத்த இரு போட்டிகளில் 209 ரன்கள் விளாசினார்.  

அணியில் விளையாடினாலும் விளையாடவில்லை என்றாலும் தனது பேட்டிங் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருந்தார். எந்த வித பாகுபாடு இல்லாமல், எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்குவதற்கும் தயங்கியதில்லை. கேப்டனாக இருந்தாலும், அணியில் ஒரு வீரராக இருந்தாலும், அணியில் விளையாடாமல் இருந்தாலும் முழு அர்ப்பணிப்போடு அணிக்காக எதையும் செய்து வந்தார். 

வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்தி வந்தார். டிஆர்எஸ் கேட்கும் போது சரியாக கணித்து கேட்டு வந்தார் ரஹானே. பெரும்பாலும் ரஹானே நிதானமாக விளையாடக்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஸ்கோயர் கட், ஸ்ட்ரைட் டிரைவ், பேக் ஃபுட் ஷாட்கள் சிறப்பாக ஆடக்கூடியவர். சில சமயம் அப்பர் கட் ஷாட்களில் கலக்குவார். 

ரஹானே பற்றிய சுவாரசிய தகவல்கள்

இலங்கை அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார்.  

டெஸ்ட் போட்டியில் 2015-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியுடன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்ததன் மூலம் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

டி20 போட்டியில் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக படைத்தார். 

 

ajinkya rahane and indian cricket team

 

 

இதுவரை டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ரஹானே சதமடித்த எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை. 12 சதங்கள் அடித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு அண்டர் 15 இந்திய அணியை வழிநடத்தினார். 2007-ஆம் ஆண்டு அண்டர் 19 அணியில் விளையாடியுள்ளார். 

இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்துள்ளார். 28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி அந்த மைதானத்தில் வெற்றி பெற உதவினார்.

முதல் இரண்டு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு விளையாடி வந்தார். பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.   

ரஹானே எட்டு வயது இருக்கும் போது அவரை விட 3 மடங்கு வயதுள்ள ஒருவர் தொடர்ந்து 3 பந்துகள் பவுன்ஸர்கள் வீசியுள்ளார். இதனால் ஹெல்மெட் அணிந்த ரஹானேவின் தலையில் பட்டது. பிறகு அழுவதற்கு ஆரம்பித்தார். பின்னர் அதே பவுலரின் பவுலிங்கில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.    

சச்சின் எழுதிய “ப்ளேயிங் இட் மை வே” என்ற புத்தகத்தில் ரஹானேவை நான் பல வருடங்களாக அறிந்திருக்கிறேன், அவர் விளையாடுவதை எவ்வளவு நேசிக்கிறார் என்று பார்த்திருக்கிறேன், கடந்த சில ஆண்டுகளாக முழுமையான அர்ப்பணிப்புடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்று சச்சின் கூறியுள்ளார். 

இந்திய டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக 2016-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கேப்டனாக ஆஸ்திரேலியா அணியுடன் 2016-17-ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் விளையாடி வெற்றி பெற வைத்தார். 

ரஹானே கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ளார். 

 

ajinkya rahane and indian cricket team

 

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே வெற்றி பெற்ற பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வின்போது ஆப்கானிஸ்தான் அணி வீரர்களையும் அழைத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதை சிறப்பிக்கும் வகையில் ஒன்றாக இரு அணி வீரர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரஹானேவின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 

 

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.

Next Story

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் - வெற்றியின் ரகசியம் குறித்து பட்லர்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
The mind is a powerful thing - Butler says on the secret of success

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என தனது ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 19ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளசிஸ், கோலி இணை சிறப்பான ஆடினர். மிகவும் சிறப்பாக ஆடிய கோலி ஐபிஎல்-இல் தனது 8ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 ரன்கள் குவித்தார். 

பின்னர், 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் சாம்சன், பட்லர் இணை அட்டகாசமாய் ஆடியது. சாம்சன் அரை சதம் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி வரை களத்தில் நின்ற பட்லர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இறுதியில் அணி வெற்றி பெற 1 ரன்னும், பட்லர் சதம் அடிக்க 6 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்து சதம் கடந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். இதன் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கடந்த சில ஆட்டங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பட்லர், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதம் கடந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அப்போது பேசிய பட்லர் “இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது, கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அதையெல்லாம் தாண்டி தற்போது பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு காலம் விளையாடியிருந்தாலும், அந்த ஆட்டத்தில் கவலைகள் மற்றும் அழுத்தங்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதைப் போக்க மனம்தான் ஒரு சக்திவாய்ந்த விஷயம், மனதைத் தோண்டிக்கொண்டே இருங்கள், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். அதோடு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாகிவிடும், சில சமயங்களில் அது சரியாகிவிடும் என்று நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும். நான் கடந்த ஆட்டத்தில் 13 ரன்களைப் பெற்றிருந்தாலும், மிகவும் நன்றாக உணர்ந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் சிறப்பாக ஆடியிருந்தேன், அதைப் போல் ஆட எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவை என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நாங்கள் இந்த சீசனை நன்றாகத் தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக இணைந்து ஆடி வருகிறோம், எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து கடினமாக உழைத்து இதே மாதிரியான சிறப்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.