மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இருவரை குறிவைக்கும் அகமதாபாத்!

mumbai indians

2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகசாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாகஇரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், ஒருவேளை ஹர்திக் பாண்டியவைமும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்காவிட்டால், அவரைதங்கள் அணிக்கு இழுக்க அகமதாபாத் அணி முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், க்ருனல் பாண்டியாவையும்ஏலத்தில் எடுக்க அகமதாபாத் அணி முடிவெடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி, இந்திய வீரர்களில்ரோகித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரையும், இஷான் கிஷன் அல்லது சூர்யா குமார் யாதவ் இருவரில் ஒருவரையும் தக்கவைக்கவுள்ளதாகவும், வெளிநாட்டு வீரர்களில் பொல்லார்டை தக்கவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ahmedabad ipl 2022 Mumbai Indians
இதையும் படியுங்கள்
Subscribe