Skip to main content

களத்தில் காட்டிய கோபத்திற்காக இளம்வீரரிடம் மன்னிப்பு கேட்ட அஃப்ரிடி!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

களத்தில் சகவீரரிடம் காட்டிய ஆக்ரோஷத்திற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடி.

 

இந்தியாவிற்கு ஐ.பி.எல். போட்டிகளைப் போல பாகிஸ்தானுக்கு பி.எஸ்.எல். டி20 கிரிக்கெட் தொடர். துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தொடரில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

 

 

அதில், முல்தான் சுல்தான் அணியைச் சேர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீரன் பொல்லார்டை தனது சுழற்பந்தில் வெளியேற்றினார் நட்சத்திர ஆட்டக்காரர் சாகித் அஃப்ரிடி. பின்னர் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த முல்தான் அணியின் இளம் வீரர் சைஃப் படாரை கிளீன் பவுல்டு ஆக்கிய அஃப்ரிடி, ‘அதோ ட்ரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது. வேகமாக போ’ என ஆக்ரோஷமாக கூறினார். அஃப்ரிடியின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்தக் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சைஃப் படார், ‘இன்னமும் உங்களைப் பிடித்திருக்கிறது சாகித் பாய் #லெஜண்ட்’ என எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து சாகித் அஃப்ரிடி, ‘ஆட்டத்தின் சூழலில் அங்கு நான் நடந்துகொண்டதற்கு வருந்துகிறேன். இளம் வீரருக்கு (சைஃபிற்கு) எப்போதும் என் ஆதரவு உண்டு. வாழ்த்துகள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

Next Story

"தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சதமடித்தவன் நான்...” இளம் வீரரிடம் சீறிய அஃப்ரிடி

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Shahid Afridi

 

 

இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவரை பாகிஸ்தான் முன்னாள் வீரரான அஃப்ரிடி கண்டிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இலங்கையில் உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் லங்கன் பிரீமியர் லீக் எனும் பெயரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இலங்கை வீரர்கள் மட்டுமின்றி பிறநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அஃப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் 18-ஆவது ஓவரின்போது காலி கிளாடியேட்டர்ஸ் வீரர் அமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம்வீரரான நவீன்-உல்-ஹக்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. பிற வீரர்கள் தலையீட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின் போட்டியின் முடிவில் அனைத்து வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும்போது நவீன்-உல்-ஹக்கை காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனான அஃப்ரிடி கண்டித்தார்.

 

அவரிடம் அஃப்ரிடி, "தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சர்வதேச போட்டிகளில் நான் சதமடித்தவன் எனக் கூறியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Next Story

தோனி குடும்பத்தின் மீதான விமர்சனம்... கொதித்தெழுந்த அஃப்ரிடி!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

Shahid Afridi

 

 

13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்விகள் அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது. மேலும் சென்னை அணி ரசிகர்கள், வீரர்களின் நிலையற்ற ஆட்டம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சில ரசிகர்கள் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வரம்பு மீறிய விமர்சனத்தை முன்வைத்தனர். அந்தவகையில், தோனியின் மகள் குறித்து ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. அதனையடுத்து, தோனியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த நபரின் செயலை பலரும் கண்டித்து, தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

 

அதில் அவர், "தோனி மற்றும் அவர் குடும்பத்தின் மீது என்ன வகையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது, இது நடந்திருக்கக்கூடாது. தோனி, இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு அழைத்து சென்றவர். தன்னுடன் விளையாடிய இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என அனைவரையும் முன்னேற்றியவர். தோனி இத்தகைய விமர்சனங்களுக்கு உரியவர் அல்ல" என கூறினார்.