Skip to main content

மேல ஏறி வர்றோம்; நெஞ்சை நிமிர்த்தும் ஆப்கானிஸ்தான்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Afghanistan netherlands cricket score update worldcup

 

உலகக்கோப்பையின் 34ஆவது லீக் ஆட்டம் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே லக்னோவின் பாரத ரத்னா ஶ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

 

அதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பர்ரேசி 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஆக்கர் மேன் மேக்ஸ் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆக்கர் மேன் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ் 42 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த சைப்ரண்ட் மட்டும் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்து, அவரும் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் எட்வர்ஸும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  நெதர்லாந்து வீரர்களில் நான்கு பேர் அடுத்தடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய நபி 3 விக்கெட்டுகளையும், அகமத் 2 விக்கெட்டுகளையும், முஜீப் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 10 கண்களிலும் இப்ராஹிம் 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் சகிதி இணை பொறுப்பாக ஆடியது. நிதானமாக ஆடி அரை சதம் கடந்த ரஹ்மத்ஷா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சஹிதி, அஸ்மத்துல்லா இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய கேப்டன் சஹிதி 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு துணை நின்ற அஸ்மத்துல்லா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து அணி சார்பில் வேன் பீக், வேன் டெர் மெர்வ், சகிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகள் எடுத்து, புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய நபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி செய்ய மைதானங்கள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரையிறுதியில் மீதமுள்ள மூன்று இடத்திற்கு ஐந்து அணிகளிடையே கடும் போட்டி நிலவுவது, இந்த உலக கோப்பையை மேலும் சுவாரசியமாக்கி உள்ளது.

- வெ.அருண்குமார் 

 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.