ADVERTISEMENT

"பயிற்சி உற்சாகமாக அமைந்தது..." டிவில்லியர்ஸ் கருத்து!!!

12:33 PM Aug 31, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் படி அமீரகம் வந்தடையும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னரே பயிற்சி எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து அணிகளிலும் பெரும்பாலான வீரர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, தற்போது பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை அதன் அணிநிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் தன்னுடைய பயிற்சியை முடித்துவிட்டு, "நீண்ட நாட்களுக்கு பின் முதல்முறையாக பயிற்சி எடுக்கிறேன். மிகவும் உற்சாகமாக இருந்தது. தற்போது வெளியே வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

கிரிஸ் மோரிஸ், உமேஷ்யாதவ், பார்த்தீவ்படேல், பவன் நெகி உட்பட பல பெங்களூரு அணியைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சியாளர் சைமன் காடீச் தலைமையில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT