Skip to main content

இந்திய அணியின் 15 பேரில் 8 பேர் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்குகிறார்கள்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய அணியில் இருந்து மொத்தம் 8 வீரர்கள் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளார்கள். அதிலும் குறிப்பாக அணிக்கு வலு சேர்க்கும் ஆல் ரவுண்டர்கள் பகுதியில் மூன்று பேரும், விக்கெட்களை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய பௌலர்களில், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் ஒரு முக்கியமான மற்றும் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும் உள்ளனர். 

 

8 out of 15 Indian players are going to play their first World Cup series

 

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கோலி, தோனி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, விஜய் சங்கர், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இதில் கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப், பும்ரா, விஜய் சங்கர், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய எட்டு பேருக்கு இதுவே முதல் உலகக்கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த எட்டு பேரின் கடந்தகால ஒரு நாள் போட்டிகளின் பெர்ஃபார்மன்ஸ் குறித்து சிறு தகவல்கள்.


ஆல் ரவுண்டர்கள் விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா. 


விஜய் சங்கர் (பேட்டிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 9

இன்னிங்க்ஸ் விளையாடியது: 5

மொத்த ரன்கள்: 165

சராசரி: 33

ஸ்ட்ரைக் ரேட்: 96.49

 

விஜய் சங்கர் (பௌலிங்):


மொத்த ஒரு நாள் போட்டிகள்: 9

இன்னிங்க்ஸ் விளையாடியது: 8

மொத்த விக்கெட்கள்: 2

எகனாமி: 5.61

 

கேதர் ஜாதவ் (பேட்டிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 59

இன்னிங்க்ஸ் விளையாடியது: 40

மொத்த ரன்கள்: 1174

சராசரி: 43.48

ஸ்ட்ரைக் ரேட்: 102.53
 

கேதர் ஜாதவ் (பௌலிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 59

இன்னிங்க்ஸ் விளையாடியது: 36

மொத்த விக்கெட்கள்: 27

எகனாமி: 5.15

 

ஹர்திக் பாண்டியா (பேட்டிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 45

இன்னிங்க்ஸ் விளையாடியது: 29

மொத்த ரன்கள்: 731

சராசரி: 29.24

ஸ்ட்ரைக் ரேட்: 116.59

 

ஹர்திக் பாண்டியா (பௌலிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 45

இன்னிங்க்ஸ் விளையாடியது: 44

மொத்த விக்கெட்கள்: 44

எகனாமி: 5.54

 

விக்கெட் கீப்பர்கள் கே.எல்.ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக்.


கே.எல்.ராகுல் (பேட்டிங்): 
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 14

இன்னிங்க்ஸ் விளையாடியது: 13

மொத்த ரன்கள்: 343

சராசரி: 34.3

ஸ்ட்ரைக் ரேட்: 80.9

 

தினேஷ் கார்த்திக் (பேட்டிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 91

இன்னிங்க்ஸ் விளையாடியது: 77

மொத்த ரன்கள்: 1738

சராசரி: 31.04

ஸ்ட்ரைக் ரேட்: 73.71

 

சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஷ்வேந்தர் சாஹல்.


குல்தீப் யாதவ் (பௌலிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 44

இன்னிங்க்ஸ் விளையாடியது: 42

மொத்த விக்கெட்கள்: 87 

எகனாமி: 4.94


யுஷ்வேந்தர் சாஹல் (பௌலிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 41

இன்னிங்க்ஸ் விளையாடியது: 40

மொத்த விக்கெட்கள்: 72

எகனாமி: 4.51

 

வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா.


ஜஸ்ப்ரிட் பும்ரா (பௌலிங்):
 

மொத்த ஒரு நாள் போட்டிகள்: 49

இன்னிங்க்ஸ் விளையாடியது: 49

மொத்த விக்கெட்கள்: 85

எகனாமி: 4.89

 

 

 

Next Story

"சோகமான நாட்களில் ஒன்று" - ஜடேஜா ட்வீட்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

jadeja about worldcup 2019 semifinal loss

 

இன்றைய தேதி சோகமான நாட்களில் ஒன்றாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து. இந்த உலகக்கோப்பை தொடரில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதியுடன் வெளியேறியது இந்தியா.

 

இந்நிலையில் இதனை நினைவுகூரும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜடேஜா, "வெற்றிபெற போராடினோம். ஆனாலும் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டோம். சோகமான நாள்களில் ஒன்று" என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஜடேஜா 77 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

"அந்த 2 இன்ச்கள் இடைவெளி"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆனது குறித்து முதன்முறையாக தோனி மனம் திறந்துள்ளார்.

 

dhoni about his run out in worldcup semifinal match

 

 

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதுகுறித்து பேட்டியளித்த தோனி, "என் முதல் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். அதேபோல இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அப்போது "நான் ஏன் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்கக்கூடாது" என எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொண்டேன். அந்த 2 இன்ச்கள் இடைவெளி... நான் ஏன் டைவ் அடிக்கவில்லை, நிச்சயமாக நான் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்க வேண்டும்" என தெரிவித்தார்.