Skip to main content

பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து! அதிரடி முடிவெடுத்த நியூசிலாந்து!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Pakistan cricket team

 

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி அடுத்த மாதம் 18 -ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தினுள் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

 

இதைனையடுத்து, 'தொடர்ந்து இது போன்ற விதி மீறலில் ஈடுபட்டால் தொடர் ரத்து செய்யப்படும்' என பாகிஸ்தான் அணியினருக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து சுகாதாரத்துறையின் இந்தக் கருத்துக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

 

இந்நிலையில், மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் குழுவில் உள்ள 53 பேருக்கும் வரும் திங்கள் கிழமை மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. தனிமைப்படுத்தல் காலத்தில் இருந்தபோதும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அதற்கான அனுமதியை நியூசிலாந்து அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

 

Next Story

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

abdul Razzaq apology to Aishwarya Rai

 

உலகக் கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே  வெளியேறியது. இது தொடர்பாகப் பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக், “உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” எனப் பேசியிருந்தார். 

 

ஐஸ்வர்யா ராய் குறித்து மரியாதை குறைவாகப் பேசியதாக, அப்துல் ரஸாக்கின் இந்த கருத்திற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அப்துல் ரஸாக் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை வாய் தவறி தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” எனப் பேசியுள்ளார். 

 

 

Next Story

பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

 

152-run target for Pakistan!

 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 07.00 PM மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

 

அதைத் தொடர்ந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57, ரிஷப் பந்த் 39, ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்தனர். அதேபோல், பாகிஸ்தானி அணி தரப்பில் ஷாஹீன்- ஷா அஃப்ரிடி 3, ஹசன் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 

இந்த நிலையில், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.