Advertisment

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று!

ENGLAND ODI TEAM

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், இங்கிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தானோடு ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடரில் விளையாடவிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று வீரர்களுக்கும், அணி நிர்வாக குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இதனையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, பாகிஸ்தான் தொடரில் விளையாடவிருந்த ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணியையும் அறிவித்துள்ளது.

Advertisment

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள புதிய அணியில் 18 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் 9 பேர் புதுமுகங்கள். இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும் ஒருநாள் போட்டிகள் வரும் 8 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

England Cricket corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe