Skip to main content

பந்து வீச்சாளர்களுக்கு ரணமாய் அமையப்போகும் இங்கிலாந்து..!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும்  மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த முறை உலகக்கோப்பை போட்டிகள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

 

2019 icc worldcup cricket england

 

 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையில் சராசரியாக 300 ரன்கள் அடிக்கப்பட்டது. டாஸ் வென்ற அணி முதலில் பேட் செய்து 300 ரன்கள் குவித்து எதிர் அணியை வீழ்த்துவது என்பது கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே நடந்தது. டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வது எழுதப்படாத விதியாக இருந்தது. இவ்வாறு முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான கடந்த உலகக்கோப்பையை போல இந்த உலகக்கோப்பையும் பேட்டிங்கிற்கு சாதகமாகதான் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த உலகக்கோப்பையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலேயே  இங்கிலாந்து அணி வெளியேறியது. அதன் பிறகு அந்த அணியிலும், இங்கிலாந்து மைதானங்களிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மைதானங்கள் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமானதாய் வடிவமைக்கப்பட்டன. 2015 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 300 அடித்த அணி இங்கிலாந்துதான். அதுபோல 2015 உலகக்கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து மைதானங்களில் மட்டும் 29 முறை 300 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. 

2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபியிலும் பெரும்பாலான போட்டிகளில் சராசரியாக 300 ரன்கள் அடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இரண்டு முறை 400 கும் மேல் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன .இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட 481 ரன்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட 481 ரன்கள்தான் ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கான  தொடரில் 3 போட்டிகளில் 6 முறை 300 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆடும் அணி 300 க்கும் மேற்பட்ட ரன்களை  குவித்தாலும் இரண்டாவதாக ஆடும் அணி அதனை சேஸ் செய்துவிடுகிறது. எனவே இந்த உலகக்கோப்பையில் பாதுகாப்பான இலக்கு என்று எதுவும் இருக்காது, என்பது மட்டுமில்லாமல் கடந்த உலகக்கோப்பையை விட இந்த முறை பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் சாதகமாகத்தான் இருக்கும் என்றே  உணரமுடிகிறது. 

 இங்கிலாந்தில் பவுண்டரிகளின் நீளம் குறைவு, பேட்டிங்கிற்கு முற்றிலும் சாதகமான ஆடுகளம் போன்றவற்றால் ரன் குவிப்பு மிகவும் எளிதாக உள்ளது. மேலும் இங்கிலாந்தில் எப்போதும் பந்து மற்ற நாடுகளை விட அதிகமாக ஸ்விங் ஆகும். இதற்கு அங்கு நிலவும் சீதோஷண நிலையும் ஒரு காரணம். ஆனால் தற்போது பயன்படுத்த படும் கூகபுரா வகையான பந்து விரைவிலேயே இலகுவாகிவிடும் என்பதால் அதிகமா ஸ்விங் ஆகாது எனவும். மேலும் விரைவிலேயே பந்து ஸ்விங் ஆவது நின்று விடும் எனவும் கணிக்கபட்டுள்ளது. 

இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காத ஆடுகளமும், பந்தும் ஒன்றிணைவதால் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த மிகவும் கடினமாகும் என்பதால் இந்த உலகக்கோப்பை பந்து வீச்சாளர்களுக்கு ரணமாய் அமையப்போகிறது என்பது மட்டும் நிச்சயமாகிறது.

 

 

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.