Skip to main content

துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாவது தங்கம் - அசத்தும் 16 வயது சிறுமி!

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி மானு பாகேர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

 

Manu

 

சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) சார்பில் மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் 10மீட்டர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய ஹரியானாவைச் சேர்ந்த மானு பேகர் எனும் 16 வயது சிறுமி, 237.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த அலீஜன்ந்த்ரா வாஸ்குவேஸ் (வயது 33) 237.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

 

அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் மிதர்வால் மற்றும் மானு பாகேர் அணி 476.1 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றது. இதன்மூலம், இந்திய அணியின் மானு இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். மானு பாகேருக்கு இதுவே முதல் உலகக்கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

7 பதக்கங்களுடன் இந்திய அணி உலகக்கோப்பை போட்டியின் பதக்கப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

Next Story

ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
elavenil valarivan

 

 

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  நடந்த ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையிலும் இந்தியா சார்பாகத் தங்கம் வென்றார். அதனைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

மேலும் இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில்,  ஜூலை 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்தியத் துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளவேனில் வாலறிவனும் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது உறுதியாகியுள்ள சூழலில், அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 


 

Next Story

உலகக் கோப்பையில் தங்கம் வென்று அசத்திய தமிழக வீராங்கனை...

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

ilavenil valarivan won gold in issf world championship

 

 

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பையிலும் இவர் இந்தியா சார்பாக தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சீனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு உலகக்கோப்பையில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்தியரும் இவர்தான். 20 வயதான இளவேனில் பிரிட்டன் மற்றும் சீன வீராங்கனைகளை தோற்கடித்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.