பெங்களுரூ, சின்னசாமி மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் 25வது போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இன்று (26ம் தேதி) மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஒருவர் கூட இன்றைய ஆட்டத்தில் அரை சதத்தைக் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களை அடித்தார். பாரிஸ்டௌ 30 ரன்களும், டேவிட் மாலன் 28 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை அணியில், லஹிரு குமார 3 விக்கெட்களையும், ரஜிதா மற்றும் மேத்திவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தீக்ஷனா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸின் குறைவான ஸ்கோர்கள்; 2003ல் இலங்கை தம்புளா 88 ரன்கள், 2001ல் இலங்கை தம்புளா 143 ரன்கள் மற்றும் 2023 பெங்களுரூ (26.10.23) 156 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது மீன் பிடித் தடைக்காலம் என்பதால் நாகை மாவட்டம் செரூகூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (28.04.2024) விசைப்படகில் மீன் பிடிக்க செல்லாமல் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களின் முருகன் என்பவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று (29.04.2024) இரவு மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், மீன்பீடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
அச்சமயத்தில் படகின் உரிமையாளரான முருகன் கடற்கொள்ளையர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் முருகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்த முருகனை சக மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்கொள்ளையர்கள் நடத்திய இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.