Skip to main content

பேங்க் பேலன்ஸ் ஜீரோ, எக்கச்சக்க கடன்; அம்பானி உதவியை  மறுத்த அமிதாப்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

  Zero bank balance, huge debt... amitabh bachchan refused Ambani's help

 

நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார். மிகப்பெரிய 'மாஸ்' ரசிகர் கூட்டம் என்பது அவருக்குப் பிறகு ஹிந்தி நடிகர்கள் யாருக்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில், படங்களில் நடித்த அமிதாப்., மெல்ல தனது முயற்சியாலும் அந்த காலகட்டத்தில் வித்தியாசமான நடிப்பினாலும் முன்னணிக்கு வந்து ஒரு கட்டத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். 'ஆங்ரி யங் மேன்' (angry young man - கோபம் நிறைந்த இளைஞன்) பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தார். இப்படி தனது துறையின் உச்சத்தில் இருந்த அமிதாப்பிற்கு ஒரு சோதனை வந்தது. 

 

நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அமிதாப், பெரும் கனவோடு தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கினார். ABC Limited - அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிட்டட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இந்தியா முழுக்க பல மொழிகளில் தரமான, ஃப்ரெஷ்ஷான படங்கள் எடுக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு செயல்பட்டது. இந்தியில் சில படங்களை அந்த வகையில் தயாரித்தது. தமிழில் அஜித் - விக்ரம் நடித்த 'உல்லாசம்' இந்த நிறுவனத்தின் தயாரிப்பே. 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அப்போதே கார்ப்பரேட் ஸ்டைலில் இயங்கியது. ஆனால், கெடுவாய்ப்பாக படங்கள் எதுவுமே பெரிய வெற்றி பெறவில்லை. ஒரு கட்டத்தில் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகி, தனது வீடு ஜப்தி செய்யப்படும் அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அமிதாப். அப்போது அவருக்கு உதவ முன்வந்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி. தனது மகன் அனில் அம்பானி மூலம் அமிதாப்புக்கு பணம் கொடுத்து உதவ முயன்ற திருபாயின் உதவியை மறுத்துள்ளார் அமிதாப். தன் பிரச்சனையைத் தானே சரி செய்து மீண்டு வர வேண்டுமென்றும் முடியுமென்றும் நம்பினார்.

 

சில நாட்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்த அமிதாப்புக்கு உதவும் வண்ணம் சில பட வாய்ப்புகளும் 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பும் வந்தன. தான் ஒரு சூப்பர் ஸ்டார், டிவியில் எல்லாம் வரக்கூடாது என்றெல்லாம் நினைக்காமல் அந்த நிகழ்ச்சியிலும் தனது முத்திரையைப் பதித்தார். மீண்டு எழுந்து வந்து மீண்டும் ஒரு முன்னணி நடிகரானார், இந்த முறை தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில். அவரது மகன் அபிஷேக் பச்சனும் நடிகர் ஆனார், ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். இன்று அந்தக் குடும்பம் நட்சத்திர குடும்பமாக மின்னுகிறது. பின்னர் ஒரு நாள், ஒரு விருந்தில் திருபாய் அம்பானி அமிதாப்பை அழைத்து தன் அருகில் அமர வைத்து, தனது நண்பர்களிடம் மிகவும் பெருமையாகக் கூறியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து அமிதாப் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். 

 

எவ்வளவு உயரம் சென்றாலும் அங்கு சோதனைகள் வரும் என்பதும் மீண்டும் எவ்வளவு வீழ்ந்தாலும் நம்பிக்கையுடன் உழைத்தால் எழுந்து வரலாம் என்பதும் அமிதாப்பின் வாழ்க்கை மூலம் நமக்குத் தெரிகிறது.

 

 

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.