Skip to main content

நீட் தேர்வை தகர்த்தெறிந்து மருத்துவராகும் துப்புறவு தொழிலாளியின் மகன் !

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

அரியலூர் அனிதா மற்றும் பல தந்தைகளின் உயிர்களையும் காவு வாங்கிய நீட் எனும் எமனை வறுமையிலும் அடித்து நொறுக்கி வெற்றி பெற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருக்கிறார் சுதாகர். நெல்லை மாவட்டம் டவுணைச் சேர்ந்த பாஸ்கர்-சிவசக்தியின் மகன்தான் சுதாகர். தந்தையோ நெல்லை மாநகராட்சியில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றுகிறார். தாயோ தினக்கூலிக்காக சில வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவுகிறார். அண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.இவர்களது குடும்பம் வறுமையில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில் சுதாகரும் 1043 மார்க் எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடிக்கிறார். பொறியியல் படிப்பதற்காக விண்ணப்பித்துவிட்டு, கலந்தாய்விற்காக காத்திருக்கும் வேளையில் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்திருக்கிறார் சுதாகரின் தந்தை. ஒன்னும் அறியாமல் திகைத்துக் கொண்டிருந்த குடும்பம், எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடனை வாங்கித் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். கடைசியில் பொறியியல் கலந்தாய்வு செல்வதற்காக சேர்த்து வைத்த பணத்தையும் செலவழித்து காப்பாற்றிவிட்டனர். இதனால் பொறியியல் கலந்தாய்விற்கும் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் சுதாகர்.

sudhagar image

தனது தந்தை மாரடைப்பில் விழுந்ததைப் பார்த்த சுதாகருக்கு, மருத்துவம் படித்து தந்தையைக் குணப்படுத்த வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டிருக்கிறது. இதை அம்மாவிடம் சொல்லவும், உனக்கு எது விருப்பமோ அதைப் படிடா, பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே! நாங்க இருக்கோம் என்று தைரியத்தை ஊட்டியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் மருத்துவம் படிக்க நீட் தேர்வும் கட்டாயமாக்கப்படுகிறது.முடிவெடுக்க முடியாமல் திகைத்த குடும்பம், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அம்மாவின் தாலி செயின் உட்பட அத்தனை நகைகளையும் அடகு வைத்து நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தும் 2017-ல் நடந்த நீட் தேர்வில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். மறு வருடம் படிக்க பணம் இல்லாததால், தவணை முறையில் கட்டணத்தை செலுத்துகிறோம் என அனுமதி கேட்டு இரவும் பகலும் கண்விழித்து படித்திருக்கிறார். 2018-ல் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று பல கனவுகளோடு இப்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இன்னும் ஐந்தே வருடத்தில் உலகம் போற்றும் மருத்துவராகவும் வலம்வர இருக்கிறார் சுதாகர்.

தம்பி சுதாகரிடம் வெற்றியின் ரகசியத்தைக் கேட்டோம். “நான் +2 வரை சேப்டர் மேல்நிலைப்பள்ளியில தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். நான் நல்லா படிக்கனும்னு எங்க அப்பா தாங்க முடியாத நாற்றத்துலயும் குப்பை அள்ளுறத நினைச்சி நிறைய நாள் மனசு உடைஞ்சி போயிருக்கேன். நோயோட இருந்துக்கிட்டு அடுத்த வீட்டுல போய் பாத்திரம் கழுவி வேலை செய்றாங்க அம்மா. இந்தக் குப்பை அள்ளுற வேலை என்னோட ஒழியட்டும், நீங்களோ, உங்க சந்ததிகளோ எந்தக் காலத்துலயும் இந்த வேலைக்கு வந்துறக் கூடாது, படிச்சி நல்ல வேலைக்கு போய்ருங்கனு அடிக்கடி அப்பா சொல்லிட்டே இருப்பாங்க. இதெல்லாம்தான் நல்ல படிச்சி முன்னுக்கு வரனும்னு கஷ்டப்பட்டு படிச்சேன். விலங்கியல் பாடம் எடுத்த ஜோஸ்லின் டீச்சர்தான் என்னோட இன்ஸ்பிரேசன். எனக்காக நிறைய நேரம் ஒதுக்கி சொல்லிக் கொடுத்தாங்க. அதனாலதான் என்னால +2-ல நல்ல படிக்க முடிஞ்சது. நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய பாடம் எல்லாம் சி.பி.எஸ்.சி சிலபஸ்ல இருந்ததுனால ஒன்னுமே புரியல. இங்கிலீஸ் கத்துக்குறதுக்காக டிக்சனரி வச்சி படிச்சேன். தினமும் 20 வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சி படிப்பேன். போகப்போக ஈஸியா இங்கிலீஸ் கத்துக்கிட்டேன். முதல் வருசம் எழுதுன நீட் தேர்வுல 116 மார்க்தான் எடுக்க முடிஞ்சது. அடுத்த வருசமும் விடாம படிச்சி, 303 மார்க் எடுத்து பாஸ் ஆனேன். நீட்-லாம் உனக்கு செட் ஆகாதுப்பா, தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதனு நண்பர்கள், டீச்சர்னு நிறைய பேரு முடியாதுனு சொன்னாங்க. என் மேல நான் வச்ச நம்பிக்கையாலதான் டாக்டர் சீட் கிடைச்சிருக்கு. கார்டியாலஜில பி.ஜி படிச்சி எங்க அப்பாவை மாதிரி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது அப்பா என்ன வேலை பார்க்கிறார்னு கேட்கும்போது, சொல்லக் கூச்சப்பட்டு எத்தனையோ முறை கூனிக் குறுகி நின்றுருக்கிறேன். ஆனால் இப்போ எல்லார்கிட்டயும் தைரியமாக சொல்றேன், “என் அப்பா குப்பை அள்ளித்தான் என்னை படிக்க வைக்கிறார்” என்று.

அன்னிக்கு படிக்கவே முடியாதுனு சொன்னவங்க எல்லாரும் இன்னிக்கு கை தட்டுறாங்க. அதனால உங்க மேல உள்ள நம்பிக்கைய கைவிடக் கூடாது. நமக்கு எந்த பாடம் நல்ல வருதோ, அந்த பாடத்தை நல்ல படிச்சாலே போதும் ஈஸியா பாஸ் ஆகிடலாம். முக்கியமா புரிஞ்சி படிக்கனும். அப்பதான் மறக்காம இருக்கும். ஒரு தடவை தோத்துட்டா சோர்ந்து போய் உக்காந்துறக் கூடாது. அதேபோல் எத்தனை முறை தோற்றாலும் ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு பணம் ஒரு பெரிய தடைதான், ஆனா நம்ம நல்லா படிச்சோம்னா உதவி பண்ண இங்க நிறைய பேரு இருக்காங்க. அதேபோல் ஒரு வருடம் வீணாகிடும், இந்த வருசத்துலயே எதையாவது படிச்சிட்டு போய்ருனு சொல்வாங்க. கண்டிப்பாக இதை செஞ்சிடாதீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் படிங்க, நீட் தேர்வை ஈஸியா தகர்த்து விடலாம்” என்று வருங்கால மாணவர்களுக்கு நம்பிக்கையான டிப்சும் கொடுக்கிறார் சுதாகர்.

sudhagar amma

சுதாகரின் தாய் சிவசக்தி நம்மிடம், “நான் எட்டாம் வகுப்புதாங்க படிச்சிருக்கேன். இவங்க அப்பா பள்ளிக்கூடம் பக்கமே போகாத மனுசன். சுதாகர் பன்னிரெண்டு படிக்கும்போது அவங்க அப்பாவுக்கு சீரீயசாயிட்டு. வட்டிக்கு மேல வட்டியாகி ஒரே கடனாகிப் போச்சி. நாங்க கஷ்டப்படுறத பாத்துட்டு, அவனால படிக்க முடியல. நான் வேணும்னா வேலைக்கு போறேம்மானு எங்கிட்ட வந்து சொன்னான். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பிள்ளைய வேலைக்கு அனுப்ப முடியுமாயா ? என் தாலி செயின் முதல் கொண்டு எல்லாத்தையும் அடகு வச்சி பணத்தைக் கொடுத்தேன். அவனா தேடிப் பிடிச்சி ஒரு கோச்சிங்ல சேர்ந்தான். நாங்க முன்னாடி இருந்த வீடு இவனுக்கு படிக்கிறதுக்கு வசதி இல்ல, அதனால படிக்க வசதியா பழையபேட்டைல வாடகை வீடு எடுத்து வந்துட்டோம். அப்புறம் நெட்ல பாத்து படிக்கனும்னு ஒரு போன் கேட்டான், கஷ்டத்தோட கஷ்டமா அதையும் வாங்கிக் கொடுத்தோம். நாங்க படுற கஷ்டத்த பாத்துட்டு ரெண்டு வருசமும் ராவும் பகலுமா முழிச்சி படிச்சான். இப்ப எனக்குத் தெரிஞ்சி எங்க சமுதாயத்துல இவன்தான் டாக்டர் ஆயிருக்கான். இவ்வளவு கடனோட இருந்தாலும் ரொம்ப பெருமையா இருக்கு தம்பி. இப்படி எல்லா பிள்ளைகளும் படிச்சி நல்ல வேலைக்குப் போகனும்பா” என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.தந்தை குப்பை அள்ளும் தொழிலாளி, மகன் மருத்துவர். ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது சுதாகரின் வாழ்க்கையில் இருந்தே தெரிகிறது. எத்தனை தடைகள் வந்தாலும், அதை உடைத்துக் கொண்டேதான் இருப்பார்கள் அடித்தட்டு மாணவர்கள் என்பதற்கு சுதாகரே மிகப்பெரிய சாட்சி.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.