Skip to main content

"அழகை வர்ணித்தே பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள்.."

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

பிரசவ வலியையே தாங்கும் உடல் வலிமையும் மனவலிமையும் பெற்ற பெண், இன விடுதலையின் அடிப்படை பெண்களின் மன மாற்றமே. பழைய பிற்போக்கான சடங்குகளில் இருந்து அவள் முதலில் வெளி வர வேண்டும். அடுப்படி மட்டுமே அவள் வாழ்க்கை அல்ல. அனைத்து தரப்பு பெண்களுக்கும் பொருளாதார விடுதலையே  அடிப்படை பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவள் தன்னை முழுவதும் கல்வி மயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு நிகராக சமூக உற்பத்தி செயல்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற விசயங்களில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வதுடன் அறிவியல் பூர்வமான விசயங்களிலும் தனது  திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

ரப



வசதி படைத்த, வசதியற்ற,  நடுத்தரப் பெண்கள்  என அனைவரும் பெண்  என்ற ஒரே உணர்வுடன் ஒன்று பட வேண்டும்.  இங்கு உடல் ரீதியாக பாலியல் மற்றும் மனரீதியாக அனைத்து தரப்பு பெண்களும் பெண் என்பதாலேயே  கசக்கி நசுக்கப்படுகின்றனர். சில மனித மிருகங்கள் ''மலரினும் மெல்லிய  காதலை, காமத்தை... இரும்பு கம்பிகள் கொண்டு'' ஆராய்ச்சி  செய்ய முற்படுகின்றன.  பண மற்றும் இன ரீதியான ஜாதி மத வித்தியாசம் ஏதும் இன்றி பெண் எனும் ஒரே புள்ளியில் இந்தியப் பெண்கள் ஒன்றுபட வேண்டும்.   அன்றைய இந்தியாவில் பெரும் புரட்சி கரமான செயல்களை ஆரம்பித்து சிறப்பாக முடித்து வைத்தவர்கள் வசதி படைத்த மேல் தட்டு பெண்களே. சாதாரண எளிய  பெண்களைக் கொண்ட ''சில அமைப்புகள்''  வசதியான பெண்களை ஒதுக்கி வைப்பது ஒட்டு மொத்த பெண் இனத்தின் ஒற்றுமையை குலைக்கும் செயல் ஆகி விடும் . பெண்ணிய அமைப்புகளுக்குள் மனரீதியான புரிந்து கொள்ளும் தன்மை  அவசியம் வேண்டும்.

திருமண ஒப்பந்தம் , அதை முறித்துக் கொள்வது, சொத்துகளில் சம உரிமை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் பெண் விடுதலை என்ற விஷயத்தை அடக்கி விடக் கூடாது. அதிகரித்து வரும் இன்றைய உலகளாவிய கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் நம் இந்தியப் பெண்களை குறி வைத்து அவர்களை தேவையற்ற பொருள்களை வாங்க வைத்து பெண்களின் கடுமையான உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை வீணடிக்கும்  ஏமாற்று முயற்சிகளில் இருந்தும் அவர்கள் வெளியில் வர வேண்டும். அழகி அழகி என வர்ணித்து புகழ்ந்தே இங்குப் பெண்கள் அடிமைப்படுத்த படுகின்றனர். அடிமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியில் வாங்க ஆண்களின் தோழிகளே !
 

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.