Skip to main content

“ஜங்க் ஃபுட்களை ஏன் தவிர்க்க வேண்டும்” - சித்த மருத்துவர் ஷர்மிகா விளக்கம்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

   “Why Avoid Junk Foods Totally” - Siddha Doctor Sharmika Explains

 

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும்; ஜங்க் ஃபுட்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதை பின்வருமாறு விளக்கமாக காணலாம்.

 

நான் எப்போதுமே என்ன சாப்பிட வேண்டும் என்று தான் சொல்லுவேன். ஜங்க் உணவுகளை எப்போதுமே சாப்பிட வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். மாதத்திற்கு ஒரு நாள் சாப்பிடலாம். மற்ற நாட்களில் உங்கள் உடல் மீது கவனம் செலுத்தலாம்.  உடம்பை பார்த்துக் கொள்ளாத மனிதன், மனிதனே இல்லை. ஏன் என்றால் கடைசி வரைக்கும் நம்ம கூட வருவது நம் உடல் மட்டும் தான். நம்ம உடலுக்கு நாம் ஒரு நல்லது செய்தால், அது நமக்கு ஆயிரம் நல்லது செய்யும். நாம ஒரு கெடுதல் செய்தால், அதுவும் நமக்கு கெடுதல் செய்து விடும். 

 

நல்ல ஜங்க் உணவு என்று சொன்னால் பிரியாணி தான் என்று சொல்ல முடியும். வெளியே சென்று மீன், மட்டன் என்று சாப்பிடும் போதும் சரி. வேறு எந்த உணவு சாப்பிட்டாலும் சரி. எல்லா உணவும் ஒரு வகையில் ஜங்க் ஃபுட் தான். ஏன்னா ரீபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துவார்கள். ரோட்டு கடை உணவில் அளவு ரொம்ப கம்மியா தான் இருக்கும். அதாவது அன்றைக்கு தேவையான உணவை மட்டும் தான் செய்வார்கள். ஆனால், பயன்படுத்தும் எண்ணெய் ரீபைண்ட் ஆயில்.

 

நம் நாட்டைச் சாராத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  பீட்சா, பாஸ்தா எல்லாம் வெளிநாட்டு டிஎன்ஏ அந்த உணவை எடுத்துக் கொள்ளும். நம்ம உடலுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. நம்ம உடலுக்கு ஒத்துக் கொள்ளாது.  நம்ம உடல் இது என்ன உணவு என்று தான் கேட்கும். ஒருவேளை வெளியே சென்று சாப்பிடும் போது, நம்ம ஊரு கொத்துகறி, மூளைகறின்னு சாப்பிடலாம். இந்த உணவுகளை வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எப்போதாவது எடுத்துக்கொண்ட ஜங்க் உணவை,  நாம் இப்போது டெய்லி அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறை சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.  நாம் பாக்குற வேலையும், மன அழுத்தம் நிறைந்ததாக மாறக் காரணமாக இரவு நேரங்களில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம்.

 

நம்ம மொபைல் ஆப் வழியாக உணவை ஆர்டர் செய்து சாப்பிடும்  வரைக்கும் நம்  உடம்பிற்கு ஆரோக்கியமே ஏற்படாது. நாம் முன்பு எல்லாம்  பழங்கள் நம்ம வீட்டில் வைத்து  இருந்தோம். இப்போது அப்படி இல்லை. டெய்லி நான் வெஜ் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் வீட்டிற்கு செல்லும் போது பழங்களை  வாங்கி செல்லலாம். பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது என்பது உடலுக்கு நல்லது

 


 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.